இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jun 29, 2009

தமிழ் சினிமாவும் -சசிகுமார் என்ற கலைஞனும்



தமிழ் சினிமாவின் முகம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு இருக்கிறது ,அந்த முகத்தை மாற்றுவது யார் பல புதுமுக இயக்குனர்களும் ,சினிமா ரசிகர்களும் தான் .முன்னெல்லாம் சினிமா என்றால் கதாநாயகனை மட்டும் முன்னிறுத்தி படத்தை எடுத்து கொண்டு இருந்தார்கள் (இன்றும் சில திருந்தாத ஜென்மங்கள் அப்படிதான் எடுத்து கொண்டு இருகிறார்கள் ).நடிகர்களுக்கு ஏற்ற கதைகள் போய் கதைக்கு ஏற்ற நடிகர்கள் தான் தேவை என்ற நிலைக்கு தமிழ் சினிமாவுலகம் வந்துள்ளது என்று சொல்லலாம்.பிரம்மாண்டம் என்பது கதயே தவிர அதில் நடிக்கும் நடிக,நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தற்பொழுது வந்த சில வெற்றி படங்களே உதாரணம் .

தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்ட தமிழ் திரை உலகம் அதை வைத்து கொண்டு படத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து கதையே இல்லாமல் காலை தேய்த்து நடுக்கும் பொழுது தீபொறி வருமாறு செய்வதும் ,மூச்சுக்கு முன்னூறு தடவை பொறி பறக்கும் வசனங்கள் பேசுவதும் இப்பொழுது எடுபடுவதில்லை.எதார்த்தமான கதை,ஒரு பகுதியின் கலாச்சாரம்,மொழி ,ஆகியவற்றை பிரதிபலிக்கும் படங்களே வெற்றிநடை போடுகின்றன.ஓவரான பில்ல்டப்புகளை ஓட ஓட விரட்டு கின்றனர்.இந்த மற்றம் தான் தமிழ் சினிமா விற்கு நல்லது.

இப்ப சசிகுமாரை பற்றி பாப்போம் கடந்த ஆண்டு எவரும் எதிர்பார்கவன்னம் சுப்ரமணியபுரம் என்ற படம் தமிழ் திரை உலகத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. புதுமுக நடிகர்கள்,புதுமுக இசை அமைப்பாளர் என்று பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது .அதை தயாரித்து இயக்கி,ஒரு நடிகராகவும் அந்த படத்தில் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.யாரும் இந்த படத்தின் கதையை தயாரிக்க முன்வராத காரணத்தினால் தானே தயாரித்தார்.இந்த படம் சினிமாவில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்த வருடம் வெளியான பசங்க படத்தை எடுத்து மறுபடியும் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று நிருபித்து விட்டார்.இவர் தயாரித்த பசங்க படம் வேறு சில தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் இவரிடம் வந்து சேர்ந்தது.அதை அப்படியே தயாரித்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் தயரிப்பாளர் என்ற நற் பெயரையும் வாங்கியுள்ளார் .அதோடு நின்றார நாடோடிகள் படத்தில் மறுபடியும் நடித்து அந்த படமும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .ஒரு தயாரிப்பாளராகவும் ,ஒரு இயக்குனராகவும் ,ஒரு நடிகர்ரகவும் வெற்றி பெற்றுள்ள சசிகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .சசிகுமாரின் இந்த வெற்றி தொடர என் வாழ்த்துக்கள் .

Jun 26, 2009

கூகிள் தளத்தை முடக்கிய மைக்கேல் ஜாக்சன்














அமெரிக்கா
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை பற்றி செய்தி அறிய இணயத்தில் அதிக அளவு கூகிள் தளத்தை பயன்படுத்தியதால் கூகிள் செய்தி தளத்திற்கான சர்வர்கள் அறை மணி நேரம் ஸ்தம்பித்து விட்டது .இதனால் கூகிள் சர்வர் சிறிது நேரம் செய்திகளை அளிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.

இதே போல் தற்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் (twitter) இணையதளமும் ஸ்தம்பித்து விட்டது . இங்கிலாந்து நாட்டை சேர்ந்த (B.B.C) இணையத்தளம் இன்று நாற்பத்தி ஆறு சதவிகிதம் வரை டிராபிக் உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது . செய்திக்காக உலக அளவில் பிரபலாமான இணையதளங்களிலும் இதே நிலைமை தான்.

அந்த நபரின் இறந்த செய்தியை முதலில் அறிவித்தது (www.tmz.com)என்ற இணையத்தளம் .இந்த செய்தி படி படியாக சோசியல் நெட்வொர்க் தளங்களில் பரவி பின்பு வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுதும் அதிக அளவில் சென்றடைந்தது .

இன்று கூகிள் (Trends) அதிக் அளவு தேடப்பட்ட தகவலும் மறைந்த பாப் பாடகரை பற்றியதே.இன்று முழுவதும் இணையம் மூலம் விவாதிக்கப்படும் பத்து முக்கியமான தலைப்புகளும் மைக்கேல் ஜாக்சன் பற்றியதே.

Jun 25, 2009

ஐ .நா சபையும்- நம்ம ஊரு போலீசும்

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை)










ஐ.நா சபை -நம்ம ஊரு போலீஸ் ஓர் ஒப்பீடு

  • .நா. சபை உலக பிரச்னைக்கு பஞ்சாயத் பண்றதுக்கு ஆரம்பிச்ச ஒரு அமைப்பு.
நம்ம போலீஸ் உள்ளூரு பஞ்சாயத்து பண்றதுக்கு ஆரம்பிச்ச அமைப்பு.

  • .நா. சபைய பார்க்க போகனும்னா பிளைட் புடுச்சு அமெரிக்காவுக்கு போகணும்
நம்ம போலீச பார்க்க போகனும்னா அஞ்சு குயர் பேப்பர் வாங்கிட்டு போகணும் பார்த்த பிறகு குளிர் காலமா இருந்த டி காபி வாங்கி கொடுக்கணும் ,வெயில் காலமா இருந்த ஆப்பிள் ஜூஸ் ,ஆரஞ்சு ஜூஸ் வாங்கிகொடுக்கணும் (அவ்வளவுதான்)

  • .நா. சபை ஆரம்பிக்க பட்டது உலக நாடுகள் பிரச்சனை முக்கியமா போர் பிரச்சனை தீர்பதற்கு ஆனா இப்பவும் போர் நடந்து தான் இருக்கு.
நம்ம போலீஸ் வேலைக்கு போட்டது கொலை கொள்ளை போன்றவற்றை தடுக்க ஆனா இப்பவும் நடந்துட்டு தான் இருக்கு.

  • .நா. சபை போர் நடந்து முடுஞ்ச பிறகு பிளைட்ல உணவு பாக்கெட் போடுவாங்க. (இருக்கிறவன் எல்லாம் செத்த பொறவு யாருக்கு போடரான்குனு தெரியல)
நம்ம போலீஸ் கொலை ,கொள்ளை நடந்த பிறகு தான் அந்த இடத்துக்கே வருவாங்க .

  • .நா. சபைல போர் நடக்கற பொழுது போர்டுக்கும் நாட்டின் மீது கண்டனம் தெரிவிச்சு தீர்மானம் மட்டும் நிறைவேதுவாங்க(அவ்வளவுதான் ).
நம்ம போலீஸ் கேஸ் கொடுக்க போனம்னா புகாரை மட்டும் வாங்கிக்குவாங்க விசாரணை எல்லாம் பண்ண மாட்டாங்க. (சில சமையம் புகாரை எழுதி ஏன் பேப்பர் ர வெட்டியா தீகனும்னு விட்ருவாங்க)

  • .நா. சபை எப்பவும் கென்யா ,காங்கோ போன்ற குட்டி குட்டி நாட்ல தப்பு நடந்த உடனே பொய் பேசி தீர்த்துட்டு உலக அமைதிக்கு நாங்க என்றும் பாடுபடுவோம் அப்படீனு சொல்லிடு திரிவாங்க .(குட்டி நாடுகளின் பட்டியலில் இலங்கை வராது)*
நம்ம போலீஸ் எப்பவும் கொலை செய்றவனை ஜீப்ல ஏத்தி உட்டுட்டு பிக் பாக்கெட் அடிக்கறவன்,குழந்தை களிடம் முட்டைய புடுங்கி திங்கறவன் போன்றவர்களை புடுச்சு உள்ள போட்டுட்டு சட்டம் தன் கடமையை சரியா செய்யும் என்று நியூஸ் பேப்பர் காரங்களுக்கு பேட்டி கொடுக்கறது.
  • .நா. சபைல அவுங்க ஆதரவு வேணும்னா ஒட்டு வேணும்.
நம்ம ஊரு போலீஸ் ஆதரவு வேணும்னா நோட்டு வேணும் .(அதாங்க பணம் வேணும் )

  • .நா. சபைகிட்டேயும் படை இருக்கு அமைதி படைன்னு இருக்குனுதான் பேரு அதனால எப்பவும் அமைதியாத்தான் இருக்கும்.
நம்ம போலீஸ் கிட்டயும் படை இருக்கு நீங்க தமிழ் வரமாதிரி எப்பவும் சம்பவம் முடுஞ்ச பிறகுதான் வரும் வந்து ஒரு வாரத்துக்கு அங்கேயே இருக்கும்.

  • .நா. உரிமையாளர்கள் ,அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,ரஷ்ய ,பிரான்ஸ் போன்ற நாடுகள். (அப்பப்ப நீயா நான்னு பிரச்சனை வரும் )
நம்ம ஊரு போலீஸ் உரிமையாளர்கள் ஆளும் கட்சிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் .

  • .நா.சபை செயல்பாடுகளின் சாமீபத்திய உதாரணம் இலங்கையில் நடந்த இன அழிப்பு போர்.
நம்ம போலீஸ் செயல்பாடுகளின் சமீபத்திய உதாரணம் சட்ட கல்லூரி வாசலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.

இன்னும் சொல்லிடே போகலாம் எழுதுறதுக்கு தான் பிளாக்கர் அக்கௌன்ட் பத்தாது.


75ecx2ky8v

Jun 24, 2009

பன் டிவியும் -குப்பை லாரியும்

யாரையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல(ஏற்கனவே அவர்கள் புண்படுத்தியதால் )


பன் டிவி -குப்பை லாரி என்ன ஒற்றுமை சிறு விளக்கம் .

குப்பை லாரி பற்றி முதலில் பார்போம்.
தெருவுல கிடக்கிற குப்பய கூட்டி கூடைல போட்டு அந்த கூடைல இருக்கிற குப்பைய கொண்டுபோய் குப்பை அல்ல வர்ற லாரில போட்ட அந்த குப்பை லாரி போகிற பக்கமெல்லாம் ரோட்ல ரெண்டுபக்கமும் கொட்டிட்டே போயிடும் .குத்துமதிப்பா பார்தமன்னா நூறுகிலோ குப்பை லாரில இருந்துதுனா அது கடைசியா பொய் சேர்றப்ப அம்பது கிலோ குப்பை தான் இருக்கும் .குப்பை லாரி குப்பய அல்லுதோ இல்லையோ அது தன்னையும் நாரடுச்சு ஊரையும் நாரடுச்சுடும்.

பன் டிவி
அதே மாதிரி யாரும் வாங்கதா குப்பை படங்களை குத்தகை கணக்கா பேசி வாங்கிட்டு வந்தறாங்க.சரி குப்பை படங்களை வெச்சு அவுங்க என்ன பொங்கலுக்கும் தீபவளிக்குமா போடமுடியும் லாபம் பார்கனும்ள அதனால் ஒவ்வொரு ஊர்ல இருக்கிற திரை அரங்குகளை புடுச்சு அந்த குப்பை படங்களை வெளியிடறாங்க.குப்பய யாராச்சும் போய் பார்பாங்களா இல்லைல அதனால தன் கிட்ட இருக்கிற டிவி பலத்தால அந்த குப்பய கலர் ஜிகினாவ காட்டி வீட்ல இருக்கிற எல்லாத்தையும் தியேட்டருக்கு ஒடவைக்குறாங்க .அங்கே போன பிறகு தான் தெரியும் அது ஜிகினா இல்லை குப்பை கிடங்கு என்று . என்ன ஆச்சு -குப்பை படம் வீட்டையும் குப்பை ஆக்கிடுச்சு தியேட்டரையும் குப்பை ஆகிடுச்சு.

அதனால இப்ப பன் டிவி பார்கிறதுக்கே நிறைய பேருக்கு வெறுப்பாய் இருக்குது .எப்ப பாத்தாலும் ஒரே கூச்சல் கும்மாளம்னு .எப்படி பார்பாங்க அதன் தரம் தான் தாழ்ந்து விட்டதே .ஆத்துல விழுந்தேன் படத்தை வெளியிட்டது முதல் அதன் போக்கே மாறிவிட்டது .கதையே இல்லாத திரை காவியங்களுக்கு திரைவிமர்சனம் அரைமணி நேரம் வேறு. பட வரிசையில் பத்து வாரத்திற்கு முதலிடம் என்னத்த சொல்லறது .அவர்கள் வெளியிடும் அண்ட புளுகை மக்கள் இப்பொழுது வெகுவாக புரிந்து கொண்டு இருகிறார்கள் என்பது நிஜம் .

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை நல்ல தரமான படங்களை வெளியிட்டால் மக்களுக்கு ஜிகினா கூட காட்ட தேவை இல்லை அவர்களே எடுத்து பூசிகொல்ல்வார்கள் உங்கள் ஜிகினவை பிறரிடம் காட்ட.

Jun 23, 2009

நகைச்சுவை -சட்டசபைக்கு போகாமல் சத்தம் போட புதிய வழி

(யாரையும் புண்படுத்த நோக்கில் எழுதப்பட்டது அல்ல )




சட்டசபை கூட்டமோ பாராளுமன்ற கூட்டமோ எப்ப நடந்தாலும் அமளி துமளி ஆகறது சகஜமா போச்சு.வெளிநடப்பு செய்யறதும்,கைநீட்டி பேசறதும் இப்படி ஒரே பொழப்ப போச்சு.அப்புறம் என்ன சபை ஒத்தி வைக்கபடுகிறது என்று சபாநாயகர் தொண்டைவரள கத்துவார்.

மக்கள் வரிப்பணத்துல தேர்தல் நடத்தி ஒட்டு போட்டு பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போங்க ராசா அப்படீனு அனுப்பி வச்சறோம்.அதுல பெரும்பாலானோர் சட்ட சபைக்கு போய் மக்கள் பிரச்சனையை பேசறாங்களோ இல்லையோ சத்தம்போட்டு வெளினடப்பவது செய்து டிவி சானலுக்கு பேட்டி கொடுக்குறாங்க.அதுல இன்னும் சில சட்டசபை உறுப்பினர்கள் அதுக்கும் வரமாட்டாங்க கேட்ட நேத்து வாசப்படில வழுக்கி உளுந்துடேன் போன்ற உன்னதமான காரணங்கள் சொல்வார்கள்.அதிலும் பாரளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு விமானத்துல(வரி பணத்துல)டாட்டா காடீட்டு போவாங்க ஆனா அங்க போய் பாராளுமன்றத்துக்கு போகமாட்டாங்க குளிர்கால கூட்ட தொடர் குளிர் அடிக்குது அதான் போகமுடியல அப்படீனு சொல்வாங்க.

என்னடா எப்ப சட்ட சபை கூடுனாலும் அஞ்சாவது படிக்கிற பள்ளிகொட பசங்க மாதிரி ஒரே சத்தம் போட்டு அடுச்சு புடுச்சு ஓடி திரியரார்களே நாம கட்டற வரி பணம் எல்லாம் இப்படி இவுங்க கூச்சல் போடறதுக்கே போயிடுதே இதுக்கு எதாவது வேற வழியும் இருக்க பணம் மிச்சம் ஆகணும் அதே சமயம் சட்டசபையும் நடக்கணும் என்ன பன்னால்னு குப்புற படுத்து யோசிசப்ப குபிர்னு ஒரு ஐடியா வந்துச்சு அது என்ன அப்பிடீனா ?

இந்த ஐடியா -யாவை முதல்ல நம்ம சட்ட சபை உறுப்பினர்களுக்கு பரிசோதித்து பார்க்கலாம் அப்புறமா டெல்லிக்கு போகலாம.

முதல்ல நம்ம தமிழ்நாட்ல இருக்கிற (234)சட்டசபை தொகுதி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் ,வெப்காம் ,ஹெட் போன் அப்புறம் ஒரு பி.எஸ்.என். எல் இன்டர்நெட் இணைப்பு (லிமிடெட் download) ஒன்று அவர்கள் வசிக்கும் வீட்டிற்க்கே கொடுத்துவிட வேண்டியது .அப்புறம் ஆளுக்கு ஒரு ஜிமெயில் அல்லது யாஹூ இலவச (இலவசம்தான் ரொம்ப புடிக்குமே )அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுதர்றது .அப்புறமென்ன கூட்டம் கூடி சத்தம் போடணுமோ அப்பெல்லாம் (234)உறுபினர்களுக்கும் ஒரு மெயில் அனுபிடனும் .எல்லோரையும் ஒரே நேரத்தில் ஆன்லைன் -நில் வரச்சொல்லி என்ன பேசனும்னு தோணுதோ அத பேசிட்டு இல்ல அவங்க திருவுருவத்தை பார்கனும்ன வெப்காம்-ல பார்த்துட்டு சத்தம் போடலாம்.முக்கியமான கோப்புகள் அனுப்ப வேணும்னா ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சர் மூலமா அனுப்பிவிடலாம.

உறுப்பினர்கள் யாராவது ரொம்ப சத்தமா பேசினாங்கன்னா நம்ம மின்துறை அமைச்சர் கிட்ட சொல்லி அந்த தொகுதி முழுக்க கரண்ட் கட்டு பண்ணீடலாம் .அப்புறம் அடுத்தநாள் வரைக்கும் அவற்றை சாட்டிங் குழுமத்தில் சேர்த்துக்க கூடாது போன்ற அவசர சட்டம் கொண்டு வரலாம் .ஆளுங்கட்சிக்கு ஒரு குழுமமும் எதிர்கட்சிக்கு ஒரு குழுமமும் அதை கட்டு படுத்தறது சபாநாயகர் தான் (admin)அல்லது (moderator).இதன் மூலம் நம்ம வரிப்பணம் ரொம்ப மிச்ச படுத்தலாம்.

எப்படி எல்லாம் மிச்சம் ஆகுதுன்னு கேகுறீங்களா

1)நம்ம உறுப்பினர்கள் யாரும் சென்னைல இருக்கிற சட்டசபைக்கு வர வேண்டியதில்லை .இதன் மூலம் நம்ம உறுப்பினர்களுக்கு தருகிற பயணப்படி மிச்சம்.(உறுபினர்களுக்கும் அவர்கள் பள்ளி ,கல்லூரி போன்ற தொழில் பாதிப்பு அடையாது )
2)உறுப்பினர்கள் யாரும் வராததுனால சென்னைல இருக்கிற சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வாடகைக்கு விடலாம் .இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் .
3)அதே போல சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கான்டீனை நேராக அண்ணா நினைவிடம் அல்லது எம்.ஜி.ஆர் நினைவிடம் பக்கத்தில் இடமாற்றலாம் எதிர்காலத்தில் உன்னா விரதம் இருக்கும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
4)அதே போல உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு காரில பவனி வருவதால் சென்னையில் கடும் போக்குவரத்து ஏற்படும் ஆனால் இந்த ஆன்லைன் முறையால் உறுப்பினர்கள் யாரும் வரவேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் பெரிதும் பயன் அடைவர்.

உறுப்பினர் நிபந்தனை .
.கண்டிப்பாக யாரும் மற்ற சாட்டிங் குழுமத்துக்குள் செல்ல கூடாது
.பாதியில் யாரும் சயின் அவுட் செய்ய கூடாது அப்படி செய்தால் ஒரு வாரத்திற்கு அவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்க படும்
.மின்சாரம் தரவும் தராமல் போவதும் அந்த அந்த சமயம் பொருத்தது அதை பற்றி யாரும் புகார் மனு வாசிக்க கூடாது .


என்ன எப்படி இருக்குங்க நல்லா இருந்த நல்லா இருக்குனு சொல்லுங்க இல்லேன்னா நல்லா இல்லைன்னு சொல்லுங்க

Jun 20, 2009

உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்

நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .

(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது .

நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் .

எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும்.
நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.


மேலும் கூகிள் அட்வோர்ட்ஸ் உள்ளதை போலவே நமது தளத்திற்கான விளம்பர வரிகளை சொந்தமாக அமைத்து கொள்ளலாம்.நமது இணையத்தளத்தில் வரும் அட்க்ரிட்வோர்க் விளம்பர பலகை அளவையும் நம் மாற்றி கொள்ளலாம் .
இணையதளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்

Jun 18, 2009

முகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி!


அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சி சானல்களை வைத்துள்ளன என்பதை யாவரும் அறிந்ததே.தமிழ் தமிழ் என்று தமிழை கொன்று சினிமா அதை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில்,மக்கள் தொலைக்காட்சி தனது வித்யாசமான அணுகுமுறையால் தனக்கென தனி இடத்தை பெற்றது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி .மண் பயனுற வேண்டும் என்ற கூறிய நோக்கத்திற்கு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் வித்யாசப்பட்டது .அரசியலில் ஆயிரம் பல்டி அடித்தாலும் மக்கள் தொலைக்காட்சி எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை தனது நிகழ்ச்சிகளில் .

சுதந்திரதினம், பொங்கல், தீபாவளி நடிகைகள் பேட்டி எடுக்கும் தொலைகாட்சிகளுக்கு மத்தியில் மக்கள் சார்ந்த கிராமிய மனம் கமழும் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மக்கள் இடத்தே ஒரு நற்பெயரை பெற்று இருந்தது .
கோட்டு,சூட்டு போட்டு கொண்டு செய்திவாசிபவர்கள் மத்தியில் சட்டை ,வேட்டி,வெள்ளை துண்டு அணிந்து செய்திவாசிபதிலும் வித்யாசம் காட்டியது ,அதிலும் முடிந்தவரை தமிழ் பெயரையே பயன்படுத்தி வந்தார்கள் .நிகழ்ச்சிகளில் ஒரு தரம் முகம் சுளிக்க வைக்காத காட்சி அமைப்பு என்று பலதரப்பிலும் பாராடப்ப்டது.

விளம்பரத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஏற்று கொள்ளவதில்லை என்ற கட்டுப்பாடு .மக்களை ஆட்டுவிக்கும் மெகா சீரியல் நாடகங்களுக்கு மத்தியில் சந்தன காடு ,ஈழம் நேற்றும் இன்றும் ,நேதாஜியின் வரலாறு போன்ற தொடர்களை ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சி நேயர்களை தன் பக்கம் கவர்தது .

இப்படி அனைத்திலும் வித்யாசம் காட்டிய இந்த மக்கள் தொலைகாட்சியில் டெலி
ஷாப்பிங் விளம்பரங்கள் அண்மைக்காலமாக ஒளிபரப்ப படுகிறது .வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாத மற்ற தொலைக்காட்சிகள் தான் இப்படி டெலி ஷாப்பிங் விளம்பரங்களை காட்டி காலம் கடத்தி கொண்டு இருகிறார்கள் .ஏன் இந்த மாற்றம் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி என்ற பெயர் பெற்ற இந்த தொலைக்காட்சி எப்படி தனது நிகழ்ச்சிகளை சமரசம் செய்து கொண்டது .
விரைவில் இயேசு அழைக்கிறார் போன்ற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப படும் என்று வார ஏடுகளில் படித்தேன் .

மக்கள் தொலைக்காட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது?. மாற்றத்தை கொண்டுவந்து உலகு வாழ் தமிழர்களிடையே ஊடக புரட்சி செய்த இந்த தொலைக்காட்சி மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாற வேண்டும் .மாறுமா ?

Jun 6, 2009

தீவிரவாதம் ஏன் ?

இன்று உலகத்தை அச்சமுற செய்து கொண்டு இருக்கும் விஷயம் தீவிரவாதம்.உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது.அதில் பலியாவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் மட்டுமே.தீவிரவாதத்திற்கு நாடுகள் கிடையாது,மடங்கள் கிடையாது,மொழிகள் கிடையாது,அதற்க்கு தேவையானது உயிர்கள் மட்டுமே.

நமது இந்தியாதேசம் மிகப்பெரிய சாவல்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்க்கு விதிவிலக்கல்ல தினம் தினம் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.வருட வருடம் நமது பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதி அதிகரித்து கொண்டே வருகிறது.தீவிர வாதிகள் மிரட்டல் விட்டால் சில நாட்களுக்கு முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகபடுதுவதும் பின்பு ஒன்றும் நிகழாத பொது அந்த பாதுகாப்பை விளக்கி கொள்வதும் அன்றாட வேலையாய் போனது.அதிலும் தீவிரவாத மிரட்டல் காரணமாக அரசியல் வாதிகளுக்கும் ,பெரிய பெரிய தொழில் அதிபருக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அளிக்க பட்டு வருகிறது .மக்களின் வரிப்பணம் இப்படி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் செலவு செய்தால் ,ஏழைகள் அதிகம் வாழும் நம் தேசம் எப்படி முன்னேறும்.

வந்த பின் காப்பதற்கு பதிலாக வருமுன் காத்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா !.நம் நாட்டில் வறுமை இன்னும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது,ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை நம் நாட்டில் அப்படி இருக்க
மக்கள் செலுத்தும் வரிபணத்தை முழுமையாக மக்களுக்காக செலவிட முடியவில்லை.நமது வரிப்பணம் இராணுவம் ,உளவு அமைப்புகளுக்கு செலவிடபடுகின்றன இருந்தும் என்ன பயன் ?தீவிர வாதம் இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது .

முதலில் நமது ஆளும் அரசுகள் தீவிரவாதத்தை பற்றி முறையாக ஆராயவேண்டும் .தீவிரவாதிற்கான அடிப்படைக்காரணம் வறுமை,போதிய கல்வி அறிவு இல்லாமை,வேலை இன்மை போன்றவைதான்.முதலில் நமது அரசு இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிகம் இருகிறார்கள்.எப்படி இந்த தீவிரவாத அல்லது தடை செய்ய பட்ட அமைப்புகளில் சேருகிறார்கள் அல்லது சேர்க்க படுகிறார்கள் ?.இந்த தீவிரவாத அமைப்புகளின் முதல் குறி வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் வறுமையின் பிடியில் இருப்பவர்கள் தான் .வறுமை காரணமாக இந்த இளம் சமூகம் தீவிரவாதத்தை நோக்கி செல்கிறது .மனதளவில் உடைந்து கிடக்கும் இத்தகைய இளைஞர்களை சுலபமாக மூளை சலவை செய்ய பட்டு தீவிரவாதிகளாக மாற்றபடுகிறார்கள்.உனக்கு தேவையானதை நீ பெற்றுகொள்ள துப்பாக்கியை பிடிப்பது தப்பே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் கொண்டு வரபடுகின்றனர் .விளைவு அரசாங்கத்தை தன் பக்கம் திருப்ப
பொது இடங்களில் குண்டு வைப்பு இல்லை அரசு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றை செய்கின்றனர்.ஆனாலும் பெரும்பாலும் உயிரிழப்பதோ அப்பாவி மக்கள் மட்டுமே .

தீவிரவாதத்தை குறைக்க முதலில் தவிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுதான் .இலவசமாக தருகிறேன் பேர்வழி என்று மக்களை முடக்காமல் இளைய சமுதாயத்தை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.பாதுகாப்பாக செலவிடப்படும் பணத்தில் சிறிது ஏழைமக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்தால் வறுமை ஒளியும்.வேலைவைபை பெறுகிறேன் என்று கூறிக்கொண்டு கணினி வேலையை மட்டுமே உருவாகாமல் மற்ற துறைகளிலும் வேலைவைபை உருவாக்க வேண்டும் .தடம் புரளும் இளைய சமுதாயத்தை நேர்வழியில் செல்ல அரசாங்கம் முன்வரவேண்டும். அப்பொழுது தான் இளைஞர்கள் இந்த நாட்டிற்க்கு தூணாக இருப்பார்கள் இல்லையேல் அவர்கள் மனம் துருவேறி துப்பாகியை தூக்கும். அது நம் நாட்டுக்கு தேவையா ?