இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 25, 2009

செயற்கையை நோக்கி ஒரு வாழ்க்கை
















மனித இனம் எதற்கு படைக்க பட்டது ,ஏன் படைக்க பட்டது என்று தெரியவில்லை .ஆனால் நாம் இயற்கையால் தான் படைக்க பட்டோம் இயற்கையால் தான் வளர்க்க பட்டோம் .அனால் இன்று இந்த உலகில் எதையோ ஒன்றை அடைய ஆசைப்பட்டு இருக்கிற சுகங்களையும் இழந்துவிட்டோம் .பிற உயிர்களை போல நாமும் இயற்கை யோடு ஒன்றி வாழ்திருந்தால் இந்த முன்னேற்றங்கள் இருந்திருக்காது என்பது உண்மை .ஆனால் இன்று நம் கண்முன்னே எவ்வளவு கொடூர நிகழ்வுகள் ,ஆனாலும் நம் அந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாகவே பார்க்கிறோம் ஏன் நமது மனம் மரத்து விட்டதா ?இல்லை மரத்துவைக்க பட்டதா? தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து அழும் நாம் ஏன் ஒருவன் வழித்தடத்தில் துடித்து கொண்டிருக்கும் பொழுது கண்டும் காணாமல் செல்கிறோம் .நாம் வாழவில்லை வாழ்வது போல நடித்து கொண்டு இருக்கிறோம் .செயற்கையான சிரிப்புகள் ,செயற்கையான நடை ,செயற்கையான பேச்சு என்று நாமும் இயற்கையை பிறந்து செயற்கையை மாறிவிட்டோம் .பசுமையாய் இருக்க வேண்டிய நம் உள்ளம் வறண்டு கிடக்கிறது,சுதந்திரம் பற்றி பேசும் நாம் ஒரு சிறு பறவையின் சுதந்திரம் நமிடையே இருக்கிறதா என்று யோசித்தால் இல்லை ,எல்லை கோட்டை கடக்க கூட நமக்கு கடவு சீட்டு தேவை படுகிறது ,இவ்வளவு பெரிய மனிதன் அந்த சிறிய அட்டைக்குள் அடக்க பட்டுவிட்டான் கடவு சீட்டாக.ஆகா மனிதன் மீது இருந்த நம்பிக்கை போய் ஒரு கடவு சீட்டை நம்பவேண்டயுள்ளது.

சுதந்திரம் என்று சொல்லி நம் மீது கட்டுப்பாடு விதித்து கொண்டோம் .நவீன கலாச்சாரம் என்று சொல்லி நம்மையே அளித்து கொண்டோம் .ஏன் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு எல்லைகோட்டை ஓடியே சிந்தித்து கொண்டு இருக்கிறோம் .அதை மீறினால் தவறு என்று .

குடும்பத்துக்காக உழைக்கிறோம் என்று சொல்லி அந்த குடும்பத்தையே பிரிந்து நிற்கிறோம் .செயற்கையான பொருட்களை சேர்க்க இயற்கையான நம் உறுவுகளை பிரிந்து நிற்கிறோம் .

இன்று தினமும் கொலை கொள்ளை ,தீவிரவாதம் ,இன அழிப்பு என்று செய்திகள் கேள்விபடுகிறோம். கொலை செய்பவன் வஞ்சத்தை மறந்து ஒரு நிமிடம் யோசித்தால் அந்த கொலை நிகழாது ஆனால் அந்த ஒரு நிமிடம் இந்த மனம் யோசிக்க விடுவது இல்லை.இன அழிப்பு என்று சொல்லி நம் மானிட இனத்தையே அளித்து கொண்டு இருக்கிறோம் .பாதுகாகத்தான் ஆயுதம் என்று போய் உயிர்களை வித விதமாக கொன்று அளிக்கும் ஆயுதங்களைதான் உற்பத்தி செய்கிறோம் .ஏன் என்ற காரணத்தை பார்த்தல் பணம் என்ற ஒன்று .
அது உணர்வுகளை பிரிகிறது உணர்ச்சிகளை உடைக்கிறது.

அறிவுக்காக படிப்பது என்று போய் மதிபென்னுகாக படித்துக்கொண்டு இருக்கிறோம் .விளைவு அந்த புத்தகங்களில் உள்ள எழுத்துகள் நமக்கு வெறும் எழுத்தாகவே தெரிகிறது ,அதிலுள்ள கருத்தை நமது மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது .எதனால் என்று பார்த்தல் கல்வி மாயம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று ஒரு நிலை இன்று

இன்று நம் கையில் செல்போன் என்ற சாதனம் இருக்கிறது தகவல் தொடர்புக்கே அந்த சாதனம் ஒழிய வேரஎதிர்க்கும் இல்லை .ஆனால் நம் அந்த சாதனத்தை பேசுவதற்காக வாங்கி பேசும் மனபூர்வமான நேரத்தை குறைத்து கொண்டோம் .எப்படி என்று பார்த்தல் பணம் வந்து நிற்கிறது முன்னால் .பேசுவதற்காக வாங்கி பயன்படுத்திய அந்த சாதனம் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பிற வசதிகளை புகுத்தி ,காசை பறித்து ,மனிதனிடமிருந்து பிரித்து விடுகிறது .

தொலைக்காட்சி என்ற கண்டுபிடிக்க பட்டு இன்று நம் இல்லத்தில் தவறாமல் குடிகொண்டு விட்டது .உலக நிகவுகளை அறிய பயன்படுத்திய இந்த சாதனம் இன்று கால மாற்றத்தால் மிக பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறது நம் கண்முன்னால் .நம் எதை எதை வேண்டாமென்று நினைகிறோமோ உதாரணமாக விரோதம்,ஆக்ரோஷம் ,பகை ,ஆபாசம் போன்றவற்றை இலவசமாக நம் வீட்டிலேயே பார்த்து கொல்ல்கிறோம் .மேலும் ஆபாசம்,பழிதீர்த்தல் போன்ற வற்றை காட்டி அவர்களும் பணம் சம்பாதித்து பின்பு நம் உள்ளங்களையும் சீரழிகின்றனர் .வீட்டிலிருந்து கொண்டே இன்று நாம் நம் உறுவுகளுடன் பேசி கொள்வதில்லை .தொலைக்காட்சியே கதி என்று கிடக்கிறோம். விளைவு இன்று உருகளுள் சரியான புரிந்து கொள்ளுதல் இல்லை ,அதனால் விவாகரத்து ,தற்கொலை போன்ற சோகங்களில் முடிந்து விடுகிறது .

இந்த மனித இனம் ஏன் இப்படி அகிவிட்டது என்று தெரியவில்லை? .பணம் ஒரு தேவைதான் ஆனால் பணமே லட்சியமாக இருந்தால் வாழ்ந்து என்ன பயன் இந்த உலகில்.எதையோ தேடி தொலைந்து கொண்டு இருக்கும் நம் மனதினை நமக்காக காத்து கொண்டு இருக்கும் நம் உயிர்களை தேடி ,அவர்களின் உணர்வுகளை தேடி புறப்படுவோம் .எல்லை கடந்த அன்பை பெறுவோம் .

May 23, 2009

மெகா சீரியல் எடுக்க -பத்து டிப்ஸ்(நகைச்சுவை )


இப்ப எல்லாம் மெகா சீரியல் தான் பெண்களுக்கு முக்கியமான பொழுது போக்கு .உங்கவீட்லயும் ஒரு குழந்தை பிறந்திருக்கும் ,உங்கவீடம்மா பாக்குற நாடகத்துலேயும் குழந்தை பிறந்திருக்கும் ,உங்க வீட்டு குழந்தை வளந்து பெரியவனாகி கல்யாணமே பண்ணி வச்சுருபீங்க.ஆனா உங்க வீட்டு அம்மா பாக்குற நாடகத்துல வர்ற குழந்தை இப்பதான் எல்.கே.ஜி முடிச்சு யு.கே .ஜி போயிருக்கும் .அதனால நீங்களே ஒரு மெகா சீரியல் எடுக்கவோ அல்லது இயக்கவோ எனக்கு தெரிஞ்ச சில ஐடியா தரேன் .
மெகா சீரியல் தயாரிக்க சில டிப்ஸ்.

  1. முதல்ல நீங்க உங்க சீரியலுக்கு ஒரு நல்ல தலைப்பு வச்சுக்கணும் எடுத்துகாட்ட-அவள் ஒரு மங்கை ,மூதேவி ஸாரி ஸ்ரீதேவி ,அமிக்கல்லு ஆடாங்கள்ளு,இப்படி ஏதாவது ஒரு பெயர வச்சுக்கணும்(குறிப்பு ஏற்கனவே இருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் பெயர எல்ல நாடகத்துக்கு வச்சதால இனி வெளிநாட்டு பெண்கள் பெயர வச்சுக்கறது இன்னும் உத்தமம் )இல்லேன்னா நாலு புள்ளி கோலம் ,அஞ்சு புள்ளி கோலம் பத்து புள்ளி கோலம்னு பெற வச்சுக்கலாம் (அலங்கோலமுனு வச்சுட்ட இன்னும் சிறப்ப இருக்கும்) .
  2. ஏதாவது ஒரு பெரிய பங்களாவ குத்தக கணக்கா பேசி வாடகைக்கு புடுச்சுகணும் .காசு மிச்சம் பண்ணும்னு நினச்சா அதே பங்களா மேல் போர்சன ஆபிஸ்னு போடு மாடி நாலு பெஞ்சு சேறு போட்டு வச்சுக்கணும் .
  3. அப்புறம் நாலு சோபா வாங்கி வாடகைக்கு புடுச்ச ஊட்டு நடுவுல போட்டுவச்சுகனும்.நடுவுல ஒரு டீபாய் வச்சு ஒரு பழைய செய்திதாள நாலா மடிச்சு வச்சுக்கணும் .அப்புறம் ஒரு டெலிபோன் அந்த டீபைமேல வச்சரனும் .(நான் குறிபிடுவது குறைந்தபச்ச பொருட்கள் விருப்பமிருந்தால் இன்னும் அதிகமாக பொருட்களை வாங்கி வைக்கலாம் இல்லேன்னா விட்டுடலாம்)
  4. அப்புறமா நடிகருக்கு ஆள் புடிக்கணுமில்ல கவலையே படாதீங்க வருஷம் (1995)சமயத்துல கதாநாயகிக்கு மாமனா,அக்காவா, நடிச்சவங்க நெறைய பேரு இப்ப சும்மா இருப்பாங்க அதுல உங்க கதைக்கு? தேவயானவங்கள தேர்வு செஞ்சுக்குங்க வயசான கதபாதரத்துல நடிகறதுக்கு.அப்புறம் தமிழ் சினிமால மார்கெட் போன நடிகைகள் இருப்பாங்க அவங்கள கூப்ட உடனே வந்துடுவாங்க கதையின் நாயகி யாக .அப்புறமா வாட்ட சாட்டமான ஒரு ஆள புடுச்சுகங்க அந்த சீரியல் நாயகியின் கணவனா நடிகறதுக்கு(குறிப்பு இன்னும் நடிகர்கள் தேவை பட்டால் சட்ட சபைக்கு போங்கள் டிவி ல நடிகரவிங்கள விட இவுங்க சூப்ற நடிப்பாங்க )
  5. கிளிசரின் கம்பெனிக்கு போன போட்டு ஒரு பத்து லிட்டர் மொத்தமா வாங்கிக்குங்க .அப்புறமா ஆடை வேணுமில்ல ஏதாவது ஒரு லாண்டரிக்கு போய் தொவைக்காத துனியா தேவையான அளவு வாங்கிட்டு வந்து அந்த அந்த கதா பாத்திரங்களுக்கு குடுங்க .

  6. அப்புறம் முக்கியமா தேவ கதை அதபத்தி கவலை படாதீங்க .ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுக்கு முன்னாடி இப்ப கரண்டா ஓடிட்டு இருக்கிற சீரியல் நாலு அஞ்சு அசராமல் பாருங்க ஒவ்வோவ்று சீரியல் இருந்தும் ஒரு சீன வெட்டி போடுங்க ஒரு நாளைக்கான கதை ரெடி !இதே மாதிரி தினமும் நாடகம் பார்த்தே கதை ரெடி பண்ணீடலாம் ).
  7. அதே மாதிரி கதைல நடிக்கிற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் பேசிகொண்டிருக்கும் போதே எதற்கென்று தெரியமாலே பொங்கி பொங்கி அழ வேண்டும் .அப்பா தான் அதை பார்க்கும் தாய்குலங்களின் கண்ணிலும் கண்நீற்குலம் உண்டாகும் .அதுக்குதான் லிட்டர் கனக்க கிளிசரின் வாங்கி வச்சுருபீங்க.
  8. அதே மாதிரி நடிகர் நடிகைகள் வேகமாக நடக்கும் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பொழுது ஸ்லோ மோசன்ள நடக்ரமாதிரி காண்பிக்க வேண்டும் .அப்பதான் அந்த காட்சிய நாலு வாரத்துக்கு ஓட்ட முடியும் .
  9. பினனணி இசை இது ரொம்ப முக்கியம் ஆனால் வேலை ரொம்ப ஈசி புதுசா யாராச்சும் மியூசிக் கத்துகிட்டு இருந்த ஒரே அமுக்க அமுக்கிட்டு வந்து அவங்களுக்கு என்ன தெரியுமோ அத வாசிக்க சொன்னால் போதும் .முக்கியமா கதாநாயகி வேகமாக நடக்கும் பொழுது பித்தாள கொடத்த படிகட்டுல இருந்து உருட்டி விடறமாதிரி சத்தம் வரணும் .
  10. அப்புறமா உங்க மெகா சீரியல உட்காந்து பார்க்கும் பெண்களை கவர்ற மாதிரிஏதாவது சின்ன சின்ன பரிசு பொருட்கள் இலவசமா அள்ளி வீசுங்க.
ஒன்னு சொல்ல மறந்துட்டேன் மெகா சீரியலுக்கு முக்கியமானதே ஓபனிங் பாட்டுதான்.ஏதாவது ஒரு டான்ஸ் மாஸ்டர் ர புடுச்சு யாருக்கும் புரிஞ்சும் புரியாத மாதிரி பத்து நிமிஷம் பல்ல கடுச்சுட்டு ஆடுற மாதிரி இருக்கனும் (குறிப்பு இந்த மாதிரி ஓபனிங் சாங்கை வைத்தே உங்களுக்கு ஒதுகின நேரத்துல பாதி நேரத்தை முடுச்சரலாம் .

என்ன பேச்சையே காணோம் இப்படி தான் பல பேரு மெகா சீரியலு எடுத்துதான் மெகா கோடீஸ்வரன் ஆகி இருக்கான்.

Apr 28, 2009

வறுமையை ஒழிப்பேன் என்று கூறாதீர்கள் -ராகுல் காந்தி

வறுமையை ஒழிக்க தேசத்தையை தீவிரவாதம் என்னும் பிடியிலிருந்து மீட்க இன்னும் ஒருமுறை காங்கிரஸ் கட்சிக்கு வாகளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று வருங்கால காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்கிறார் .

சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆயிற்று அதில் அதிகமான முறை உங்கள் கட்சிதான் ஆட்சி செய்தது .அப்படி பெரும்பான்மையான வருடங்கள் ஆட்சி புரிந்த உங்கள் அரசு இந்த ஐந்து வருடத்தில் மட்டும் எப்படி வறுமையை முழுமையாக ஒழிப்பீர்கள் தீவிரவாதத்தை எப்படி முழுமையாக ஒழிப்பீர்கள் .

போதும் எங்கள் நாட்டை நீங்கள் சொரண்டியது .இன்னும் ஒரு முறை நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை அமெரிக்காவிடம் அடுகுவைத்து கொள்ளை அடிக்கமாடீர்கள் என்று என்ன நிச்சயம் .காங்கிரஸ் என்றால் கதர் ஆடை தான் நினைவுக்கு வரும் ஒரு காலத்தில் .ஆனால் இன்றைக்கு ஒரு நெசவாளி சந்தோசமாக வாழ்கிறானா என்று காட்டுங்கள் பாப்போம் .உங்கள் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் இன்னும் அதே நிலையில் அப்படியே முன்னேறாமல் இருகிறார்கள் .ஆனால் பன்னாட்டு முதலாளிகளும் சில இந்திய பண முதலைகளும் ஆயிரகணக்கான கொடிகளை கொள்ளை அடிக்கிறார்கள் .

உலக பணக்காரன் அம்பானியும் இதே நாட்டில் இருக்கிறான் ஒரு வேலை சோத்துக்கு வலி இல்லாதவனும் இங்க தான் இருகிறார்கள் .இந்த இருவர்கிடையே எவ்வளவு பொருளாதார இடைவெளி இதை உங்களால் சமன் செய்ய முடிந்ததா குறைந்த பட்சம் உண்ணும் உணவிற்கு ஆவது வலி செய்ய உங்கள் கட்சியால் முடிந்ததா இல்லை நடுத்தர ,ஏழை சமூக பாதுகாப்புக்கு உங்களால் உத்திர வாதம் கொடுக்க முடிந்ததா .

உங்கள் கட்சியின் ஆட்சி குறைபாடு உதாரணம் இந்த ஐந்து ஆண்டுகளே போதும் . உங்கள் ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்தது மும்பை நகரில் .அதே நகரம் அமைந்துள்ள மராத்திய மாநிலத்தில் இன்னொரு மூலையில் லட்சகனக்கான் மக்கள் உங்களது காலத்தில் தான் தற்கொலை செய்து காலத்தில்கொண்டார்கள் .நாட்டுக்கே உணவளித்த உழவன் அவன் வயித்து பாட்டுக்கே உணவிலாமல் மாண்டுபூனார்கள் . யாவது பொருளாதார மண்டலம் என்றீர்கள் என்னடா அது என்று பார்த்த பொழுது ஒன்னும் இல்லாதவன் கிட்ட புடுங்கி இருகுரவன்கிட்ட கொடுக்கிற கதையா கொஞ்சம் நிலம் வைத்து கொண்டு இருந்த உழவன் நிலத்தை பன்னாட்டு கம்பனிக்கு கூறு போட்டு கொடுத்தீர்கள் .


உங்களது கட்சி ஆட்சி காலத்தில் மாதம் ஒரு முறையாவது நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடக்காமல் இருந்ததில்லை . அதிலும் பாருங்கள் அப்பாவி மக்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள் நல்லவர் வேடம் அணிந்தவர்கள் எல்லாம் தப்பித்து கொள்கிறார்கள் .

அதுமட்டுமா உலக ரவுடி அமெரிக்காவின் காலை நக்கி பிழைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது யார் நீங்கள் தான் . கியூபா போன்ற குட்டி குட்டி நாடே அமெரிக்காவை எதிர்க்கும் பொழுது நீங்கள் தான் ஐயோ அணு ஒப்பந்தம் அணு ஒப்பந்தம் என்று கூறி பாராளுமன்ற உறுபினர்களை பணத்தால் வீழ்த்தி வெற்றியும் கண்டு விடீர்கள் .இன்னும் ரிலையன்ஸ் ,டாட்டா போன்ற பெருமுதலாளிகளுக்கு அணு உலைகளை பங்கிட்டு கொடுபதுதான் மிச்சம் .

பன்னாட்டு தொழிற்சாலைக்கு வரி ரத்து ,மானியம் ,இலவச மின்சாரம் கொடுத்தீர்கள் ஆனால் துவண்டு கிடக்கும் இந்திய ஏழை மக்களுக்கு குடிக்க ஒரு வாய் தணீர் கொடுத்தீர்களா .இன்னும் இங்கு குடி நீருக்கு பல மயில் தொலைவு சென்று கொண்டு வரும் நிலையில் எத்தனை கிராமங்கள்

பழிக்கு பழி என்று உங்கள் கட்சிகாரர் ஒருவர் மாண்ட காரணத்திற்காக லட்ச லட்சம் மக்களை கொன்று குவிக்கும் ஈன பிறவிகள் தான் நீங்களும்.

ஜெய்கோ ஜெய்கோ என்கிறீர்கள் ஆனால் ஐயகோ ஐயகோ என்று ஈழ தமிழர் குரல் உங்கள் காதுகளில் வில்ல வில்லையா .எப்படி கேட்கும் நன்றி கெட்ட ஜென்மங்கள் நீங்கள் ஜெய்கோ பாடல்களை காப்புரிமை வாங்கினீர்களே . அந்த பாடல் வரும் படத்தின் பெயர் போல தான் நம் நாட்டின் நிலைமையும் அதுதான் மாடமாளிகைகள் அருகிலே ஓலை குடிசைகள் . தப்பு செய்தவனுக்கு கருப்பு பூனை பாதுகாப்பு அப்பாவி மக்களுக்கு நீங்கள் வைப்பது பெரிய ஆப்பு .


இனியும் நீங்கள் ஒட்டு கேட்காதீர்கள் வறுமையை ஒல்லிபேன் என்று எங்கள் காதுகளில் இந்த குரல் கேட்டு கேட்டு புளித்து விட்டது எங்களுக்கு .

உங்களுக்கும் தீர்விரவதிகளுக்கும் என்ன வித்யாசம் அவன் குண்டு வைத்து கொள்கிறான் .நீங்கள் ஆட்சிசெய்து கொல்ல்கிறீர்கள் என் இனத்தை .








Apr 27, 2009

ஒட்டு வாங்க உண்ணா விரதமா வேண்டாம் அய்யா இந்த ஏமாற்று வேலை

யாரை ஏமாற்றி ஒட்டு வாங்குவதற்காக இவர் இப்படி எல்லாம் நடிக்கிறார் என்று தெரியவில்லை அய்யா எமக்கு? .ஈழ பிரச்சனயை பேசி தீர்க்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் இவரே நான் பந்து நடத்துறேன் ,சாப்டாம இருகிறேன் சொல்லறது எல்லாம் காலும் கடத்தும் செயல் என்றே கூறலாம் .

இவர் மட்டுமா உண்ணா விரதும் இருக்கிறார் தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் உன்ன உணவின்றி தங்க இடமின்றி இவரை விட மிக வயதானவர்களும் உடல்நலம் குன்றி சிகிச்சை எடுக்கமுடியாமல் நிலைமையில் இருகின்றனர் .
இது முற்றிலும் ஒட்டு வாங்கும் தந்திரமே ஒழிய el தமிழர் மீதான அட்கரை என்பது ஒரு துளி இல்லை .

ஐந்து முறை முதல்வராக இருந்து நீங்கள் ஒருநாளும் இல்லாத திருநாளாம் என்ற பழமொழி படி தான் ஆட்சி பீடம் ஏற மறுபடியும் துன்பத்தில் துவண்டு கிடக்கும் ஈழ தமிழனை தன் கேடயமாக பயன்படுத்துகிறார் . கோடி தமிழரின் தலைவர் அல்ல இவர் ஆயிரம் ஆயிரம் கோடிகளில் புழங்கும் தலைவர் இவர்
என்னவோ நேத்து இரவு இருந்துதான் ரத்த வெறி பிடித்த ராஜபக்சே ஈழ தமிழர் மீது குண்டு போடுவது போலவும் இதை கேள்வி பட்ட அவர் உடனே உன்ன விரும் இருப்பது போலவும் காட்டி கொள்கிறார் .இவரது கொள்கை கோட்பாடு எல்லாம் எப்பவோ வெட்ட வெளிச்சத்துக்கு வந்துடுச்சே அதற்கு சமீபத்திய உதாரணம் ஆளும் கட்சி சார்பாக நடைபெற்ற பந்த் ஒன்றே போதுமே அவசியமான பேருந்து ஒன்றும் ஓடாமல் தமிழர்களை இளைஞர்களை கெடுத்து குட்டி சுவராக்கும் மது கடைகளை திறந்து வைத்தது கலைஞர் டிவி ,சன் டிவி போன்றவற்றில் திரைபடங்கள் ஒளிபரப்புது என்ன கொடுமைடா சாமி .

ஒரு பக்கம் ஒட்டு வாங்க கட்டு கட்ட பணம் விநியோகும் மறுபக்கம் இந்த உண்ணா விரதும் .ஏன் அய்யா இப்படி வயதான காலத்தில் இப்படி உங்களை வருத்தி கொள்கிறீர்கள் .நீங்கள் மனது வைத்தால் எப்பொழுதோ இந்த பிரச்சனயை பேசி தீர்த்து முடித்து வைதுருக்கலாம் .மானம் கேட்டே காங்கிரஸ் கூட கூட்டு போட்டு பதவி ஆசையால் எங்களையும் ஏமாற்றி ஏன் ஈழ மக்களையும் ஏமாற்றி வீணாக நாளை கடத்தி கொண்டு இருகிறீர்கள் .


மீறி தமிழகத்தில் அரசியல் நெருக்கடி முற்றினால் வெள்ளக்காரி கிட்ட பேசி அந்த சிவசங்கரன் ,மற்றும் முன்னாள் உளவு துறை அதிகாரி ஆகிய இரு மலையாளிகளை தான் தமிழர் பிரச்சனயை பற்றி பேச இலங்கைக்கு அனுப்புவார்கள் .தமிழர் பிரச்சனயை பற்றி பேச ஒரு தமிழன தலைவர் அங்கு செல்லாமல் கோட்டு சூட்டு போட்ட அந்த மகராசங்கள எதுக்கு அப்பா அங்க அனுப்புறீங்க .அவர்களும் போய் ஏம்பா நாங்க குடுத்த குண்டு நல்ல வெடுச்சுச்ச இல்லையா என்று கேட்டு விட்டு திருபவும் வந்துடுவாங்க .இதுல மக்கள் கட்டற வரி பணம் தான் செலவானதுதான் மிச்சம் அந்த இரு அதிகாரிகள் போயிட்டு வரதுக்கு .

நீங்க நெனச்சா அங்கு போய் இது பற்றி பேசி தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க கூடாத ,அய்யா பிளைட்டு செலவுக்கு நாங்க வென காசு தர்முங்கோ .உங்களுக்கு எங்க நேரம் சினிமா பாராட்டு விழாவுக்கு போய் முதல் வரிசையில் உட்காருவதற்கும் குடும்பத்து சண்டைய தீர்த்து வச்துக்குமே நேரம் சரியா போச்சு .

நடுவண் அரசுல முக்கிய மான அமைச்சர் பதவிகளை கேட்டு வாங்கறதுக்கு எத்தனை முறை டெல்லி போயிருபீங்க ஆனா ஈழ பிரச்சனைக்கு தந்தி மட்டும் தான் அடிகிறீங்க ஏன் உங்ககிட்ட போன் இல்லையா ,இல்ல சென்னைல இருந்து பிளைட்டு இல்லையா டெல்லி போறதுக்கு .காங்கிரஸ் காரன் கிட்ட பதவி வாங்கறதுக்கு டெல்லி போனீங்களே நீங்க கேட்ட பதவி கேடைகலீனு என்ன உண்ணா விரதம் இருந்தீங்கள ? ரூம் போட்டு பேசி தானே வாங்குனீங்க அதே மாதிரி இதையும் செய்ய வேண்டியதுதானே .

இப்ப உங்க ஒரே கவலை என்ன அப்படீனா உங்களுக்கு எதிர ஈழ தமிழ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுக்க உங்க ஆட்சிக்கு எதிரா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள் . அவங்கள எப்படி சமாளிகரதுனு தெரியலை உங்களுக்கு .அதனால ஒட்டு மதுரைய தவற மத்த பக்கம் ஒட்டு வாங்கறதுக்கு இது ஒண்ணுதான் வழி .அதான் வந்து உட்காந்துடீங்க அண்ணா நினைவிடதுள்ள .

ஈழ தமிழர் பிரச்சனையை உலக நாடுகளை எல்லாம் விட உங்களுக்கே அதிக முன்னுரிமை இருக்கிறது பேசி தீர்க்க .அதை விடுத்து நீங்களும் உங்கள் உடன்பிறப்பும் ஏன் இந்த வேகாத வெயில்ல இப்படி கஷ்டபடுறீங்க .
இப்ப கூட ஒன்னும் கேட்டு போகலை காங்கிரஸ் காரன் கிட்ட இருந்து வெளிய வாங்க ஈழ பிரச்சனைக்கு போராடுங்க .உங்களுக்கு நாங்க கைகொடுகிறோம் .
அதை விடுத்து இப்ப பண்ற நாடக தனமான உண்னவிருதத்தை நிறுத்துங்க .
உங்கள் உடல்நிலைக்கு இது உகந்தது அல்ல .

ஈழ பிரச்சனை தீர்வதற்கான பூர்வாங்க வேலையே பாருங்க அய்யா அப்பொழுதுதான் நாங்கள் நம்புவோம் தமிழின தலைவர் என்று ?

Apr 25, 2009

காங்கிரஸ் தலை தங்கபாலு -வேட்டு வெள்ளைசாமி காமெடி பேட்டி

இது முற்றிலும் கற்பனையே யாரையும் புண்படுத்துவதற்கு இல்லை
நமது தமிழ் ஊடக அரசியல் சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளைசாமி சிறப்பு தேர்தல் பேட்டி காண்பது நமது தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரே தலைவர் வேற யாரு நம்ம சேலம் தொகுதி எம்.பி தங்கபாளுவுடன் நேரடி சந்திப்பு.

வெத்து வேட்டு வெள்ளைசாமி சுருக்கம் வெ.வே.வெ:

நமது நிருபர் தலைவர் வருகைக்காக காத்து கொண்டு இருக்கிறார் .

சிறுது நேரத்தில் தங்கத்தலைவர் தொங்கபாலு மனிக்கவும் தங்கபாலு வருகிறார்.வந்ததும் நம்ம நிருபரிடும் வணக்கம் சொல்லி மன்னிக்கவும் கொஞ்ச தாமதம் ஆய்டுச்சு மெகா டிவி கேமரா மேன் அறிவாலயத்தில் இருந்தான் ஐயோ மாத்தி சொல்லிட்டேன் சத்யமூர்த்தி பவன்ல இருந்தான் கூட்டிட்டு வரதுக்கு கொஞ்சம் லேட் .

வெ.வே.வெ : பரவா இல்ல சார் பேட்டிய ஆரும்பிகலாம சார் ?

தங்க: கொஞ்சம் பொறுங்க கேமரா மேன் காமெராவ செட் பண்ணட்டும் (ஏன்பா சைடு கேமரா எங்கப்பா அதையும் பிக்ஸ் பண்ணிஎடுங்க .கேமரா மேன் அய்யா அந்த கேமரா கல்யாண வீட்டுக்கு வாடகைக்கு போயருகுதுங்க வரவேற்பு விழா முடுஞ்சுதான் வரும். தங்கபாலு சரி சரி செல் போன்ல கேமரா இருந்த அதுனாலாவது எடுங்க சொல்லிட்டு) சரி இப்ப இப்ப ஆரம்பியுங்க

வெ.வே.வெ: அய்யா உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க

தங்க : என்ன பத்தி தகவல் வேணுமுனா மெகா டிவி பாருங்க சும்மாவா அம்பது கோடி செலவு செஞ்சு டிவி ஆரம்பிச்சேன் . அதுல நா காலைல எந்துருச்சு பல்லு விலக்கி காபி குடிகறதுலஇருந்து நைட்டு குட் நைட்
கொசுபத்தி ஏத்தி வச்ட்டு தூங்கறது வரைக்கும் கான்பிபாங்க .

வெ.வே.வெ:இந்த தேர்தலா பத்தி கொஞ்சம் சொல்லுங்க உங்க வெற்றி வாய்ப்பு எப்பிடி இருக்கு .

தங்க : (கொஞ்ச நேரம் கேமரா வையே வெறித்து பார்த்து விட்டு ) அன்னை சானியா மன்னிக்கவும் சோனியா காந்தி தலைமையில் இந்த முறையும் அபார வெற்றி பெறுவோம் .


வெ.வே.வெ: (சிரித்துக்கொண்டு ) ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் அரசின் சாதனைகள் எனவேன்று கொஞ்சம் சொல்லுங்க

தங்க : என்ன அப்பிடி கேட்டு விடீர்கள் எங்களது லட்சியமே "முடிந்தவரைக்கும் கொள்ளை அடி முடியலேனா காலை பிடி " என்கிற கொள்கை படி எங்கால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திரிகிறோம் .
அரசு நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரைவாற்பது ,விவசாயத்தை படுகுழியில் தள்ளுவது குறிப்பாக தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மெகா டிவி ,வசந்த் டிவி கொண்டுவந்தது அதுமட்டுமா ஈழ தமிழருக்கும் நாங்கள் செய்த சேவை இந்த நாடே அறியும் .முந்தாநேத்து காலைல கூட ஈழ தமிழர்கள் சாம்பார் வைக்க வசதியாக ஆச்சி மசாலா ரெண்டு லட்சம் பாக்கெட் கள்ள தோணி வழிய அனுப்பி வச்சோம் .இது வொன்றே போதுமே நாங்கள் வெற்றி பெற இங்கு மட்டுமல்ல ஈழத்தில் நின்றாலும் எங்கள் வெற்றி உரிதி.


வெ.வே.வெ: ( இப்பவே கண்ண கண்ணு இருட்டுதே ) அய்யா தமிழகத்தில் காமராசர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நீங்களும் உங்க சக காங்கிரஸ் தலைவர்களும் மேடைக்கு மேடை கூவுறீங்க அத பத்தி கொஞ்சம் ..,
தங்க : என்னத்த சொல்லறதுங்க அவரு பொழைக்க தெரியாத மனுஷன் ஒரு பங்களாவ கண்டார ,காலேஜ் ,வணிகவளாகம் கண்டார இல்ல கொஞ்சமா ஒரு நானூறு ஐந்நூறு ஏகர் நிலதகண்டார பாவம் .

வெ.வே.வெ: (நீங்கல்லாம் தலைவர வந்ததுக்கு நாங்க தான் பாவம் பநீருகனும் என்று நினைத்து கொண்டு ) நீங்க மக்கள் அவைல ஒரு கேள்வி கூட தொகுதி பத்தி கேகுளைங்க்ற பேச்சு இருக்குதுங்க .

தங்க : அதி முற்றிலும் வதந்தி என்றே சொல்வேன் நான் கேட்காம எப்படி மெகா டிவி ,கலூரிகள் நாலு ஆஞ்சு ,ஷாப்பிங் வாளகம் வந்தது. அன்னை சோனியா வின் வலி காட்டுதலின் பேரில் நமது மக்களுக்கு போராடி பெற்றேன் .
அதுவுமிலாம நா கேள்வி கேட்க ஆரம்பிச்ச இந்த நாடு தாங்காது அதான் .

வெ.வே.வெ: அய்யா காங்கிரஸ் என்றாலே கோஸ்டி சண்டைனு சொல்றாங்க உண்மையா ?

தங்க : (கட்சின்னு இருந்தா சண்ட வரத்தான் செய்யும் என்று உள்ளுக்குள் நினைத்த படி) உங்களுக்கு தெரியுமா ஒற்றுமை என்றால் காங்கிரஸ் என்றுதான் அர்த்தம் . நம் தமிழக காங்கிரசில் கோஸ்டி பூசல் என்பது கிடையவே கிடையாது .குறிப்பாக வன்முறையை முற்றிலும் வெறுபவர்கள் நாங்கள் கத்தி ,கம்பு ,உருட்டு தடி போன்றவற்றில் எங்களக்கு நம்பிக்கை இல்லை .அவ்வபொழுது புழுக்கம் தாங்காம சட்டைய கிளுசுகுவோம் அவ்வளவுதான் .அதை திரித்து இந்த காங்கிரஸ் கட்சின் வளர்ச்சி பிடிக்காமல் குற்றச்சாட்டு .

வெ.வே.வெ: (இதை எப்படி தான் சிரிக்காம சொல்றாரோ என்று நினைத்து கொண்டு ) இந்தா முறையும் உங்களுக்கு சேலம் தொகுதிக்கு சீட் கொடுதுருகாங்க நீங்க வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என மாதிரியான நன்மைகளை செய்வீர்கள் ?

தங்க : நான் வெற்றி பெறுவது உறுதி இந்த முறை வெற்றி பெற்றால் மெகா டிவி போன்று மெகா இசை ,மெகா செய்திகள் என்று இன்னும் இரண்டு புதிய தொலைக்காட்சி நிறுவ அனுமதி பெறப்படும். பனை மர கள் தென்னை மர கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானத்தை தடை செய்து சேலம் தொகுதியில் புதிதாக நானூறு ஹெக்டேர் விவசாய நிலத்தில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படும் . அதிலும் குறிப்பாக ஜிகா டிவி என்ற கேபிள் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படும் .அதில் தொகுதி பிரச்சனை குறித்து உடனுக்கு உடன் தீர்த்து முடிக்கப்படும் .

வெ.வே.வெ: கூட்டணியில் இருக்கும் திராவிட கட்சி தலைவர் பற்றி கொஞ்சம் கூறவும்

தங்க : ஆறு கோடி தமிழனுக்கு ஒரே தலைவா அவர் .இவரின் பொற்கால ஆட்சியில் தான் நம் தமிழ் நாட்டை கற்காலத்துக்கு அழைத்து சென்றவர் .தமிழன் நலனில் அட்கரை கொண்டவர் ஓர் சிறு உதாரணம் ஈழ மக்கள் சிறப்பு விடுமுறையை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டும் தமிழ் குடி மக்கள் பாதிக்க படுவார்களே என்ற காரணத்திற்கு மது கடைகளை திறந்து வைத்து ஊற்றி கொடுக்க யாருக்கு வரும் மனசு .

வெ.வே.வெ: ஈழ தமிழர் பிரச்சனை பற்றி


தங்க :(முந்திக்கொண்டு ) அன்னை சோனியா தலைமையில் கொஞ்ச நாளில் பிரச்சனையை முடித்துவிடுவோம் . அப்புறம் பாருங்கள் ஈழ பிரச்சனை எலவே எலாது.

வெ.வே.வெ: அய்யா அணு ஆயுத ஒப்பந்தும் என்னவானது


தங்க : மின் உற்பத்தி செய்வதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தும் நானும் கூட என்னக்கு மனு செய்துருகிரேன் அணு உலையை பெறுவதற்கு பார்போம் .அதிலும் நான் வெற்றி பெற்றால் தமிழ் நாட்டில் முதல் தநீயர் அணு உலையை காங்கிரஸ் சார்பில் சேலம் தொகுதியில் நிறுவுவேன் .


வெ.வே.வெ:( நம்மள கொள்ளாம விட மாட்டார் போலிருக்கே ) அய்யா இறுதி கேள்வி தமிழக மக்களை பற்றி கொஞ்சம் ..,

தங்க : மனிக்கவும் நேரம் குறைவாக உள்ளது நான் தற்பொழுது விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு போய்கொண்டு இருகிறேன் சிறப்பு விருதினராக மறுபடியும் சந்திப்போம் .

வணக்கம்

கேமரா ஆப் செய்த பின்பு தங்கம் வெ.வே.வெ விடம் பதிவை வெளியிடும் பொழுது மீடியா பாட்னர் மெகா டிவி னு போடுங்க என்ற சொன்னார் .

அவரது விருப்ப படியே இப்பதிவை இணைந்து வழங்குவது மெகா டிவி .

பின்னோட்டம் இடுங்கள் முன்னேற்றுவதற்காக

Apr 22, 2009

தமிழகத்தை குறிவைக்கும் மரபணு மாற்று விதைகள்

மேற்கத்திய நாடுகளின் சோதனை களம் ஆகிவிட்டது நமது இந்தியா அதிலும் நம் தமிழ் நாடு .பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மரபணு விதைகள் இப்பொழுது நமது நாட்டில் விவசாய நிலங்களை மலடாக்கி கொண்டு இருகின்றன .குறிப்பாக அமெரிக்கா நாட்டில் இருந்து வரும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் நாதியற்று கிடக்கும் நமது விவசாயிகளை இவ்வளவு மகசூல் அவ்வளவு மகசூல் என்று ஆசை வார்த்தைகளை கூறி அந்த மரபணு விதைகளை நம் விவசாயின் தலைகளில் கட்டி விடுகிறார்கள் .அதுவும் விலை எவ்வளவு என்று தெரியுமா விவசாயிடமிருந்து கிலோ பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் வாங்கி கொண்டு அவர்கள் கொடுக்கும் விதைகள் கிலோ ஒவ்வொன்றும் நூற்றி ஐம்பதுக்கும் இருநூறுக்கும் விற்று கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

மரபணு மாற்று விதைகள்
கால மாற்றத்தால் நமது பாரம் பரியும் மிக்க விவசாய முறைகளை விடுத்து பசுமை புரட்சி என்று கூப்பாடு போட்டு களை கொல்லியும் ரசாயின உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் இட்டு நமது மண்ணை நஞ்சாகி விட்டனர் மெத்த படித்த மேதாவிகள் .இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது .நாமும் பலவிதமான நோய்களை மடியில் வாங்கி கொண்டு மருத்துவருக்கு பணத்தை அழுதுகொண்டு இருக்கிறோம் .

இது போதாது என்று இப்பொழுது மரபணு மற்று விதைகள் என்ற வஸ்து சில காலங்களாக நமது இந்தியா மண்ணில் ஊன்றபடுகிறது .அப்படி என்றால் என்ன .இயற்கையாய் இருக்கும் விதையின் தன்மையை நவீன தொழில்நுட்பம் மூளும் விதைகளின் தன்மையை மாற்றி விடுவது.அதாவது தக்காளி பழம் சிலநாட்களில் அழுகிவிடும் ஆனால் மரபணு மாற்று தக்காளி அப்படி அழுகாது பலநாட்கள் புத்தம் புது பழம் போல் அப்படியே இருக்கும் .கீழே காண்க













மரபணு மாற்று தக்காளி (இது பத்து நாட்களுக்கு மேல் அப்படியே இருந்தது )
இதுபோன்று நெல் பிற பாயிர்களின் விதைகள் மரபணு மாற்றம் செய்ய படுகிறது .பின்பு இந்த விதைகளால் உருவான பழம் காய்கறிகள் நாம் உட்கொள்ளும் பொழுது அது உள்ளே பொய் நமது மரபணு தன்மையை மாற்றம் செய்து விடுகிறது .இதனால் மலட்டு தன்மை இன்ன பிற நோய்களுக்கு ஆளாகலாம் .

அதே நேரம் விவசாய நிலங்களும் இந்த செயற்கை விதைகளால் மலடாகிவிடும் .அதேபோல இந்த முறை விதைகள் ஒரு முறை மட்டுமே பயன்படும் மறுபடியும் விதைக்க வேண்டும் என்றால் பன்னாட்டு நிறுவனத்திடம் தான் கையேந்த வேண்டும் .

இதிலிருக்கும் உண்மை என்றால் பண வெறி பிடித்த பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியா அதிகாரவர்கமும் சேர்ந்து நமது நாட்டின் முதுகெலும்பான விவாசைத்தை குழி தோண்டி புதைக்க புரபட்டிருகின்றன

ஏற்கனவே சூதாட்ட முதலைகளிடம் சிக்கி தவிக்கும் இந்த விவசாய்கள் ,பிற்காலத்தில் தைகள் பாரம்பரிய முறையை இழந்து விதைக்க நெல் மணி கூட இல்லாமல் இந்த பன்னாட்டு நாய்களிடும் தான் போய் கையேந்த வேண்டும் .அப்பொழுது அவன் செயற்கையான தட்டுபாட்டை ஏற்படுத்தி ஒரு கிலோ விதையை ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பான் .

"நமது மண்ணும் போனது நமது மக்களும் போனார்கள் "

விடுமுறைக்காக நான் ஊருக்கு பதுநாட்கள் சென்ற பொழுது ஒரு நாள் என்னுடைய அப்பா விற்கு பயனீர் என்ற விதை நிறுவனம் அவர்களின் விதையின் விளைச்சலை பற்றி சொல்லவதற்காக வேனில் அலைத்கொண்டுபோகிறோம் என்று கூறினார்கள் அன்றயதினம் அவர் வேறு வேலையாக வெளியே சென்று விட்டதால் ஏன் அப்பாவுக்கு பதிலாக நான் சென்றேன்

அவர்கள் அழைத்து சென்ற இடம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குருமந்தூர் அருகே கிராமத்தில் பயனீர் என்ற அமெரிக்கா நிறுவனம் அவர்களின் விதைகளை அந்த பகுதி விவசாய்களிடம் கொடுத்து விளைந்த மக்காசோளம் கருதுகளை காட்டி இப்படி செய்தால் இவ்வளவு மகசூல் என்று விளக்கம் கொடுத்தார்கள் .அவர்கள் சொல்லவதெல்லாம் இது அமெரிக்கா நிறுவனம் ஒரு முறை பயிரிட்டு பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்று அங்கே சில விவசாய்கள் இயற்கை வேளாண்மை பற்றி வாதமிட்டனர் அதற்க்கு காலனிக்குள் இறங்காத இந்த மெத்த படித்த மேதாவிகள் பல விதமான விளக்கங்கள் கூறி அவர்கள் சமாதனபடுதீனார்கள் .

அந்த நிறுவனத்தின் மக்கா சோள கருதுகள்












பொன்னை வித்தாலும் மண்ணை விற்காத விவசாய்கள் வாழும் நாட்டில் விசத்தை அள்ளி தெளிக்கும் முதலாளிவர்க்கம் .