இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jan 15, 2012

வாழ்த்துக்கள்

தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


நான் பதிவுகளை எழுதி சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வரவேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன்.பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை.இப்பொழுது மீண்டும் பதிவு எழுத  வந்து இருக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு வேண்டும் என்று இணைய சொந்தங்களை  அன்போடு  கேட்டுகொள்கிறேன் .

நன்றி,

அன்புடன் ஆனந்தன்


Apr 11, 2010

பச்சை வேட்டை,வெள்ளந்தி மனிதர்கள்,கருப்பு ஊடகங்கள்

"பச்சை வேட்டை " இந்திய அரசாங்கம் மாவோ இயக்கங்களுக்கு எதிராக தொடுக்கும் உள்நாட்டு போரின் பெயர் .எதற்கு இந்த போர் மக்களை காப்பாற்றவ இல்லை இயற்கையின் கொடையான காடுகளை அளித்து அங்கிருக்கும் கனிமவளங்களை சில பெரும் பண முதலைகளுக்கு கொடுபதர்க்காகவே இந்த போர்.மத்திய அரசாங்கம் இந்த போரை முப்பதாயிரம் துணை ராணுவ வீரர்களை இந்த போரில் ஈடுபடுத்தி உள்ளது.ஏற்கனவே இந்த கதர் சட்டை கலிசடைகள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடுகுவைத்து விட்டார்கள்.மரபணு மாற்று விதைகளை உலகநாடுகள் தடை விதித்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் அந்த விதை உற்பத்தி செய்யும் மான்சாண்டோ என்ற அமெரிக்க கம்பெனி இரு கரம் கூப்பி வரவேற்றன.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் மாநிலத்தில் ஆதிகாலம் தொட்டு காடுகளிலே வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்கு இன்று வரை எந்த அடிப்படை வசதியும் செய்யாத இந்த அரசாங்கம் பெரும் முதலாளிகளின் அடிவருடியாகி பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நீளமுள்ள வன பிரதேசத்தை அழித்து சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது.காடுகளையே கடவுளாக போற்றும் இந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக மாவோ இயக்கங்களும் களம் இறங்கின.

இதனால் அந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்க முடியாமல் பெரும் நிறுவனங்கள் திணறின.பெரும் முதலாளிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அது இந்திய அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்னை அல்லவா?தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் தான் கோடி கோடியாய் நன்கொடை தருகிறதே அதனால் பச்சை வேட்டை என்று பெயர் வைத்து கொண்டு ராணுவ பலத்தை பயன்படுத்தி நர வேட்டை ஆடிவருகிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் பல நூறு கிராமங்களை சூறை ஆடி உள்ளது.பல ஆயிரம் பழங்குடி மக்கள் இதில் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.


தன் சொந்த மக்களுக்கே அகதிகள் முகாமை திறந்த பெருமை இந்த மத்திய அரசாங்கத்திற்கே சேரும்.இவர்களை போய் ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்றால் எப்படி செய்வார்கள்.முதலாளிகள் நன்றாக இருக்க வேண்டும் அது மட்டுமே இந்த அரசாங்கத்திற்கு குறிக்கோள். காடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களை அடித்து விரட்டுகிறார்கள் இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா.

சானியா மிர்சாவுக்கு கல்யாணமா இல்லையா என்று வாய் கிழிய பேசி கருத்து கணிப்பு நடத்தும் ஊடகங்கள் இந்த பச்சை வேட்டை என்ற பெயரில் இயற்கைக்கு எதிராகவும் அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்குஎதிராகவும் நடந்துவரும் நிகழ்வுகளை குறித்து ஏன் ஒரு உண்மை நிலையை வெளியிட வில்லை.
"கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன".

இன்றைய தினமலர் செய்திகளில் இப்படி குறிபிட்டுளனர்.கனிம நிறுவனங்கள் எல்லாம் சாதுக்கலாம் அவர்களை எதிர்க்கும் பழங்குடி இன மக்கள் மற்றும் மாவோக்கள் ராட்சசர்கலாம்.தன மண்ணை காப்பதற்கு போராடும் மக்களை ராட்சசர்கள் என்று கூறுவது எப்படி சரியாய் இருக்கும் .மக்களின் உயிரை குடித்து கோடிகளில் புரளும் பரகாசுற நிறுவங்கள் யாவும் தான் ராட்சசர்கள்.தான் பிறந்த மண்ணிற்காக தன உயிரை கொடுத்து போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லும் இந்த மாதிரி ஊடகங்களை என்ன சொல்ல ?

" வாழ்க ஜனநாயகம் "

Mar 31, 2010

பெறு வெடிப்பு கொள்கையால்(பிக் பாங்)யாருக்கு என்ன பயன்?


சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லை ஓரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் பூமிக்கு அடியில் இருபத்தி ஏழு கிலோமீட்டர் நீளத்திற்கு சோதனை சாலை அமைத்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை பற்றி சோதனை செய்வதற்கு பலாயிரம் கோடிகளை கொட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சோதனையின் இராண்டாம் கட்டமும் வெற்றிபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன.இந்த சோதனைகள் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.என் கேள்வி என்னவென்றால் எதற்கு இந்த பெருவெடிப்பு ஆராய்ச்சி ?

இந்த ஆராய்சிக்காக பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்கள் தோண்டி சோதனை கூடம் ஏற்படுத்தி இருகிறார்கள்.இதற்கு ஆனா செலவுகளோ பலாயிரகனக்கான கோடிகளை தாண்டும்.இந்த சோதனை வெற்றி பெற்றாலும் சாதாரண மக்களுக்கு இதில் எந்த பயனும் இல்லை ஒரு சில பெருநிறுவனங்கள் மட்டும் இதில் காசு பார்க்கமுடியும்.மேலும் இயற்கை படைத்த இந்த பூ உலகத்தை பேணுவதை விட்டு அதற்க்கு எதிரான வேலையே மட்டுமே இன்று ஆராய்ச்சி என்ற பெயரால் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.பூமிக்கு அடியில் நடக்கும் இந்த சோதனையால் எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் நில நடுக்கம் ஏற்பட்டால் இந்த சோதனை கூடம் பாதிக்கப்படலாம் அதனால் இரும்பு சோதனைகூடத்தில் சுத்திக்கொண்டு இருக்கும் அதிவேக அணுக்கள் வெளிவரலாம் இதன் மூலம் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம்,போர் ஏற்பட்டு இந்த சோதனை கூடத்தின் மேல் தாக்குதல் நடத்தினால் அதன் மூலமும் இந்த சோதனை கூடம் சேதம் ஏற்பட்டு பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம்,சோதனை சாலையில் சிறு தவறு நேர்ந்து அதன் மூலம் அணுதுகள்கள் வெளிவந்து பதிப்பை ஏற்படுத்தலாம்.இப்படி எல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதங்கள். அதற்காக விஞ்ஞானம் தேவை இல்லை என்று சொல்லவரவில்லை. அணுவை பிளக்க முடியாது என்று அந்த காலத்தில் பாடிவைத்தார்கள் ஆனால் தற்கால மனிதன் அணுவையும் பிளந்தான்.அப்படி செய்ததுதான் புலிவாலை புடித்த கதையாகி போனது.அணுவை பிளந்ததன் மூலம் அதில் வெளிப்படும் ஆற்றலை வைத்து பெரும் அழிவை தரும் அணுகுண்டை மனிதன் கண்டுபிடித்தான்.இன்று அணுவால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உலக பெரும் வல்லரசுகள் யாவும் பிற நாடுகளை மிரட்ட தன் அணுகுண்டு கை இருப்பையே கைகாட்டுகின்றனர்.அணு ஆற்றல் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் இதன் பயன் கொஞ்சம் என்றாலும் ஆபத்துகள் அதிகம்.மேலும் அணுகதிர் பாதிப்பு என்பது சில நாட்களில் மறைந்திடகூடியது அல்ல அதன் பாதிப்புகள் குறைய பல நூறு வருடங்கள் ஆகும்.

விஞ்ஞானம் மனிதனை நல்ல வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும் மேலும் அணைத்து தரப்பு மக்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.இந்த பெருவெடிப்பு சோதனை என்னைபொருத்தவரை தேவை இல்லாதது.அதில் கொட்டப்படும் கோடி கணக்கான பணத்தை அடிப்படை வசதி இல்லாத பலகோடி மக்கள் இந்த உலகத்தில் இருகிறார்கள் அவர்களுக்கு பயன்படுத்தாலாம்.மேலும் மனிதன் மனிதனோடு சண்டை இட்டால் அது மனிதர்க்கு மட்டுமே பாதிப்பு இயற்கையோடு சண்டை இட்டால் அது உலகத்திற்கே பாதிப்பு.

இயற்கை கொடுத்த அன்பு பரிசு இந்த பூமி இதை பத்திரமாக பயன் படுத்தினாலே போதும் அதைவிடுத்து இந்த பரிசு எங்கே வாங்கியது எப்படி செய்தது என்று சோதித்தால் இயற்கையும் நம்மை சோதிக்கும்.

Nov 5, 2009

சமூக அக்கறை ஊடகங்களுக்கு வேண்டும்


  • ஊடகத்துறை இப்பொழுது மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுவருகிறது .உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் நீ நான் என்று போட்டிபோட்டு கொண்டு செய்திகளை தருகின்றன .இதனால் இன்று உலக நிகழ்வுகளைஉடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது .

நமது இந்திய நாட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது .தொலைக்காட்சி,இணையம்,வானொலி என்று பலவிதமான ஊடகங்களும் அடங்கும் .அதிலும் தொலைக்காட்சி என்று எடுத்து கொண்டால் எத்தனை எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலக அளவில் புகழ் பெற்ற ஸ்டார் ,பி.பி.சி வரை.


  • நமது இந்திய நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டநாடு.பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இருகிறார்கள்.எவ்வளவுதான் நாம் மென்பொருள் துறையிலும் ,மின்னணு துறையிலும் நாம்சிறந்து விளங்கினாலும் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.ஆனால் இன்று அந்த முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறது .நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் தான் காரணம் .சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மண்ணை மாற்றானுக்கு வித்து மண்ணோடு உறவாடிய விவசாயை வெறும் கையோடு நிற்க வைத்தது . மீதம் உள்ள நிலங்களை ரசாயன உரங்களை பயன் படுத்துங்கள் ,வீரிய விதைகளை பயன்படுத்துங்கள் ,பூச்சிக்கொல்லியை அடியுங்கள் என்று விவசாய்களிடம் சொல்லி மண்ணை மலடாக்கியது ,விவசாயி கடனாளி ஆக்கியது.

இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

சொல்கிறேன் .நம் தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள் நமது மாநிலம் பெரும்பான்மையாக விவசாய நிலங்களை கொண்டது அப்பொழுது நம் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்பவர்களே .தமிழுக்கு(தமிங்க்லிஷ் ) தொலைக்காட்சிகள் கிட்ட தட்ட இருபத்தைந்துக்கு மேல் இருக்கிறது .அதில் அரசியல் சார்பு சில தொலைக்காட்சிகள் இருந்தாலும் அவை கட்சினுடைய தொலைக்காட்சிகள் இல்லை கட்சி தலைவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றவை மிகப்பெரிய ஊடக நிறுவங்களின் தொலைக்காட்சிகள் ஆகும் .
சரி இத்தனை தொலைக்காட்சிகளிலும் என்ன ஓளிபரப்பு செய்கிறார்கள் ,திரைப்படங்கள் ,பாடல்கள் ,நகைச்சுவை நிகழ்ச்சி ,நெடுந்தொடர்கள் ,சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் .
ஊடகம் என்றால் சினிமா மட்டும் தான் என்று ஒரு நிலையை இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

முன்பு எல்லாம் இரவு நேரத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி சிரிப்பார்கள் ஒன்று கூடி உணவு உண்பார்கள் ,ஆனால் இப்பொழுது நிலைமை என்ன குடும்ப உறுவுகளை காட்டுகிறோம் என்று சொல்லி குடும்ப உறவுகளை சிதைக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.நாம் வாய்விட்டு சிரிபதர்க்கே இன்று திரையில் வடிவேலும் ,விவேக்கும் வரவேண்டியதாக உள்ளது.இன்னும் சில நேரங்களில் மருத்துவம் சம்மந்த பட்ட நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சி ஊடங்களுக்கு இது மட்டும் போதுமா? கோடிகனக்கானோர் கவனிக்கும் வெகுஜன ஊடகங்கள் மிக பெரிய சமூக அக்கறை இருக்கா வேண்டும் அல்லவா?

மக்களுக்கு உபயோகமாக எவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அளிக்கவேண்டும் இவர்கள் .பகுத்தறிவு தலைவர்களின் ஆட்சி இது ஆனால் அவர்களின் தொலைக்காட்சியோ மானுக்கும் மயிலுக்கும் மல்லு கட்டி கொண்டு இருக்கிறது.

ஆடி கலைத்த நடிகைகளை கூட்டி குத்தாட்டம் போடுவதற்கு பதிலாக அழிந்து கொண்டு இருக்கும் நம் நாட்டு புற கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கோட்டு சூட்டு அணிந்தவர்களிடம் பேட்டி எடுக்கும் இவர்கள் கோவணம் கட்டியவனை நீங்கள் கவனித்ததுண்டா .விவசாயம் சார்ந்த நமது பகுதிக்கு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர்கள் வழங்கியதுண்டா?

இல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் இவர்களுக்கு கோவணம் கட்டியவர்களை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ?

மக்களின்
நேரத்தை வீனடிபதற்கு பதிலாக விவசாய்கள் பயன் பெரும் அளவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் வாய்புகள் மற்றும் விவசாயத்தின் இன்றைய நிலயை நிகழ்ச்சிகளை வழங்கினால் எத்தனை லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.விவசாயத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்கு தெரியும்.கடையில் காசுகொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று மட்டும் தான் தெரியும்.

மறைந்து கொண்டு இருக்கும் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு எடுப்பதில் நம் ஆட்சி ஆளர்களுக்கு எவ்வளவு கடமை இருகிறதோ அதே அளவுக்கும் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது .இந்த வகையில் மக்கள் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாறுபட்டு நமது கலாச்சாரம்,பண்பாடு ,விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி களை வழங்கு கிறது .இந்த பொறுப்புணர்வு மற்ற ஊடகங்களுக்கும் வரவேண்டும்.

Nov 4, 2009

என்னமா கேள்வி கேக்குது பயபுள்ள -நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்

கீழ விதவிதமா போஸ் குடுத்துட்டு உட்காந்துட்டு இருக்கிறது என்னுடைய மாமா பொண்ணுங்க .நல்ல சுட்டி சரி கேமரா -வுக்கு போஸ் குடுன்னு சொன்னதுதான் பாக்கி எப்படி உட்காந்து வேலை செய்ற மாதிரி போஸ் கொடுக்குது பாருங்க .






நான் பதிவு எழுதி அஞ்சு மாசம் ஆச்சுங்க .சில பல காரணங்களால என்னால தொடர்ந்து எழுத முடியல .இதுவரை என வலைத்தளத்திற்கு வந்து நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .

Jul 9, 2009

சிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை


மக்களின் நன்மைக்காகத்தான் இந்த விலை ஏற்றம்
அமைச்சர்



அண்ணன் தம்பி பாசம்



என்ன பேசிக்கறாங்க



வருங்கால முதல்வர் காரசார பேட்டி



மக்களாட்சியில் அடுத்த அதிரடி



இந்த டிவி பழைய மாடல்

முதல் முயற்சி நல்ல இருக்குங்களா .

(ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல)

மறக்காம ஒட்டு போட்டு உங்க சனநாயக கடமைய நிறைவேத்துங்க