இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jan 3, 2009

என்ன செய்கிறது நமது பாது காப்புத்துறை

நூறு கோடி மக்களும் உன்னை நம்பி உறங்குகின்றனர் நீ உறங்காமல் இருப்பதான்னால்.

மும்பை தாக்குதலை அடுத்து நமது நாட்டிற்கு புதிய உளவுத்துறை அமைப்பை ஏற்படுத்தியது மதிய அரசு .ஆனாலும் இன்னும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டுருக்கிறது என்பது வருந்தபட்தக்க ஒன்றாகும்.அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு என்பது இன்னும் நமது பதுகாப்பு துரையின் குறைபாட்டை வெளிச்ச மிட்டு காட்டுகிறது .

நமது நாட்டிற்கென்று புகழ் பெற்ற உளவுத்துறைகள் இருகின்றன இருந்தும் என்ன பயன் இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்காவின் பெடெரல் புலனாய்வு துறை போல் நடக்க போவதை முன்கூடியே உறுதிப்படுத்த வேண்டாமா .மதிப்ற மனித உயிர்கள் மடிந்த பின்பு பாதுகாப்பை சில நாட்களுக்கு பலபடுதுவதும் பின்பு எப்பொழுதும் போல் அசட்டையாக இருபதும் வாடிக்கையாகிவிட்டது .

உளவு அமைப்புகள் நாட்டிற்காக வேலை பார்பதை விட்டு விட்டு அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உளவு பார்ப்பது தொடர்ந்தாள் இன்னும் பல இழப்புகளை நாம் சந்திக நேரிடும் .

நான் நமது பாதுக்கப்பு துறையை குறைத்து சொல்ல வரவில்லை அதில்லுல குறைகளை கலய சொல்லிகிறேன்.


Jan 2, 2009

மதுவால் கெட்டது நம் தமிழ்நாடு


ஒருவன் மது அருந்தினால் அவனுக்கு மட்டும் கேடு அல்ல அவன் குடும்பத்துக்கே கேடு .மக்களை காக வேண்டிய அரசே மக்களை மயக்குகிறது மதுவால் .
தமிழக அரசே ஆளும் அரசே நீங்கள் செய்த சாதனை பட்டியலை ஒவ்வொரு மாநாட்டிலும் வாசிபீர்களே இதையும் சேர்ந்து வாசியுங்கள் .

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு மதுகடைகளை துறந்தோம் அதனால் நம் குடிமகன்கள் இவ்வளவ்வு பேர் போதிக்கப்பட்டு இருகிறார்கள் மன்னிக்கவும் பாதிக்கப்பட்டு இருகிறார்கள் .பொங்கல் ,தீபாவளி ,புத்தாண்டு போன்ற திருநாட்களில் நாங்கள் அரசுக்கு ஒரே நாளில் நூற்றி ஐம்பது கோடி வருமானம் ஈட்டி தந்தோம் . எங்கள் ஆட்சியில் மதுவை அருந்தி வாகனம் ஓடியதில் இவ்வளவு ? பேர் மரணம் .எவ்வளுவு குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்துள்ளன போன்ற அரும் பெரும் சாதனை பட்டியல்.

வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று கூவுகிறீர்கள் ,ஆனால் அவர்கள் கையில் மது கூபி தானே இருக்கிறது .பின் எப்படி ஒரு அருமையான சமுதாயம் உருவாகும் .

மது கடைகளை துறப்பதிர்ருக்கு பதிலாக அரசு மருத்துவ மனையை துவக்குங்கள் .ஏழை உங்களை வாழ்த்துவான் .இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேன்படுதுங்கள்.

இன்னும் குறிப்பாக தமிழ் நாட்டுல மது உற்பத்தி ஆலைகளை இழுத்து மூடுங்கள்.

தங்கள் சுய விளம்பரத்தை மறந்து மதுவால் ஏற்படும் தீமையை மக்களிடத்தே ஊடகங்கள் மூலமாக விளக்குங்கள்.

இன்னும் பெறு நகரங்களில் மேல் தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் எல்லாம் கூட மேற்கத்திய மோகத்திற்கு அடிமையாகி மதுவை அருந்துவதில் பெருமை கொள்கின்றனர். நமது நாட்டிற்க்கும் நமது பண்பாட்டிற்கும் நல்லதலே.

Jan 1, 2009

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே

மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் ஈழம் தொடர் மிகபெரிய அதிர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய அந்த தொடர் . நம் இனம் ஒரு பகுதி நம் கண் எதிரிலேயே அழிகிறது .இலங்கை அரசின் ராணுவ தாக்குதலால் ஈழ மக்கள் தினமும் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இலங்கையை தன் உழைப்பால் செளிப்பாகிய இனம் இப்பொழுது நாதியற்று கிடக்கிறது .

பொழுதுபோக்கு தொலைகாட்சிகளுக்கு நாடுவே மக்கள் தொலைக்காட்சி ஈழ நிலையை ஒளிபரப்பி தன் சமுஉக பொறுப்பை நிலை நாட்டியதுக்கு நன்றி.

(ஈழ தொடரின் கோப்புக் காட்சி தொடர்பு இன்னைய தளம் தெரிந்தால் என்னக்கு தெரிவியுங்கள்.)