இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Apr 11, 2010

பச்சை வேட்டை,வெள்ளந்தி மனிதர்கள்,கருப்பு ஊடகங்கள்

"பச்சை வேட்டை " இந்திய அரசாங்கம் மாவோ இயக்கங்களுக்கு எதிராக தொடுக்கும் உள்நாட்டு போரின் பெயர் .எதற்கு இந்த போர் மக்களை காப்பாற்றவ இல்லை இயற்கையின் கொடையான காடுகளை அளித்து அங்கிருக்கும் கனிமவளங்களை சில பெரும் பண முதலைகளுக்கு கொடுபதர்க்காகவே இந்த போர்.மத்திய அரசாங்கம் இந்த போரை முப்பதாயிரம் துணை ராணுவ வீரர்களை இந்த போரில் ஈடுபடுத்தி உள்ளது.ஏற்கனவே இந்த கதர் சட்டை கலிசடைகள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடுகுவைத்து விட்டார்கள்.மரபணு மாற்று விதைகளை உலகநாடுகள் தடை விதித்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் அந்த விதை உற்பத்தி செய்யும் மான்சாண்டோ என்ற அமெரிக்க கம்பெனி இரு கரம் கூப்பி வரவேற்றன.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் மாநிலத்தில் ஆதிகாலம் தொட்டு காடுகளிலே வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்கு இன்று வரை எந்த அடிப்படை வசதியும் செய்யாத இந்த அரசாங்கம் பெரும் முதலாளிகளின் அடிவருடியாகி பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நீளமுள்ள வன பிரதேசத்தை அழித்து சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது.காடுகளையே கடவுளாக போற்றும் இந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக மாவோ இயக்கங்களும் களம் இறங்கின.

இதனால் அந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்க முடியாமல் பெரும் நிறுவனங்கள் திணறின.பெரும் முதலாளிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அது இந்திய அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்னை அல்லவா?தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் தான் கோடி கோடியாய் நன்கொடை தருகிறதே அதனால் பச்சை வேட்டை என்று பெயர் வைத்து கொண்டு ராணுவ பலத்தை பயன்படுத்தி நர வேட்டை ஆடிவருகிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் பல நூறு கிராமங்களை சூறை ஆடி உள்ளது.பல ஆயிரம் பழங்குடி மக்கள் இதில் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.


தன் சொந்த மக்களுக்கே அகதிகள் முகாமை திறந்த பெருமை இந்த மத்திய அரசாங்கத்திற்கே சேரும்.இவர்களை போய் ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்றால் எப்படி செய்வார்கள்.முதலாளிகள் நன்றாக இருக்க வேண்டும் அது மட்டுமே இந்த அரசாங்கத்திற்கு குறிக்கோள். காடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களை அடித்து விரட்டுகிறார்கள் இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா.

சானியா மிர்சாவுக்கு கல்யாணமா இல்லையா என்று வாய் கிழிய பேசி கருத்து கணிப்பு நடத்தும் ஊடகங்கள் இந்த பச்சை வேட்டை என்ற பெயரில் இயற்கைக்கு எதிராகவும் அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்குஎதிராகவும் நடந்துவரும் நிகழ்வுகளை குறித்து ஏன் ஒரு உண்மை நிலையை வெளியிட வில்லை.
"கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன".

இன்றைய தினமலர் செய்திகளில் இப்படி குறிபிட்டுளனர்.கனிம நிறுவனங்கள் எல்லாம் சாதுக்கலாம் அவர்களை எதிர்க்கும் பழங்குடி இன மக்கள் மற்றும் மாவோக்கள் ராட்சசர்கலாம்.தன மண்ணை காப்பதற்கு போராடும் மக்களை ராட்சசர்கள் என்று கூறுவது எப்படி சரியாய் இருக்கும் .மக்களின் உயிரை குடித்து கோடிகளில் புரளும் பரகாசுற நிறுவங்கள் யாவும் தான் ராட்சசர்கள்.தான் பிறந்த மண்ணிற்காக தன உயிரை கொடுத்து போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லும் இந்த மாதிரி ஊடகங்களை என்ன சொல்ல ?

" வாழ்க ஜனநாயகம் "

Mar 31, 2010

பெறு வெடிப்பு கொள்கையால்(பிக் பாங்)யாருக்கு என்ன பயன்?


சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லை ஓரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் பூமிக்கு அடியில் இருபத்தி ஏழு கிலோமீட்டர் நீளத்திற்கு சோதனை சாலை அமைத்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை பற்றி சோதனை செய்வதற்கு பலாயிரம் கோடிகளை கொட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சோதனையின் இராண்டாம் கட்டமும் வெற்றிபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன.இந்த சோதனைகள் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.என் கேள்வி என்னவென்றால் எதற்கு இந்த பெருவெடிப்பு ஆராய்ச்சி ?

இந்த ஆராய்சிக்காக பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்கள் தோண்டி சோதனை கூடம் ஏற்படுத்தி இருகிறார்கள்.இதற்கு ஆனா செலவுகளோ பலாயிரகனக்கான கோடிகளை தாண்டும்.இந்த சோதனை வெற்றி பெற்றாலும் சாதாரண மக்களுக்கு இதில் எந்த பயனும் இல்லை ஒரு சில பெருநிறுவனங்கள் மட்டும் இதில் காசு பார்க்கமுடியும்.மேலும் இயற்கை படைத்த இந்த பூ உலகத்தை பேணுவதை விட்டு அதற்க்கு எதிரான வேலையே மட்டுமே இன்று ஆராய்ச்சி என்ற பெயரால் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.பூமிக்கு அடியில் நடக்கும் இந்த சோதனையால் எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் நில நடுக்கம் ஏற்பட்டால் இந்த சோதனை கூடம் பாதிக்கப்படலாம் அதனால் இரும்பு சோதனைகூடத்தில் சுத்திக்கொண்டு இருக்கும் அதிவேக அணுக்கள் வெளிவரலாம் இதன் மூலம் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம்,போர் ஏற்பட்டு இந்த சோதனை கூடத்தின் மேல் தாக்குதல் நடத்தினால் அதன் மூலமும் இந்த சோதனை கூடம் சேதம் ஏற்பட்டு பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம்,சோதனை சாலையில் சிறு தவறு நேர்ந்து அதன் மூலம் அணுதுகள்கள் வெளிவந்து பதிப்பை ஏற்படுத்தலாம்.இப்படி எல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதங்கள். அதற்காக விஞ்ஞானம் தேவை இல்லை என்று சொல்லவரவில்லை. அணுவை பிளக்க முடியாது என்று அந்த காலத்தில் பாடிவைத்தார்கள் ஆனால் தற்கால மனிதன் அணுவையும் பிளந்தான்.அப்படி செய்ததுதான் புலிவாலை புடித்த கதையாகி போனது.அணுவை பிளந்ததன் மூலம் அதில் வெளிப்படும் ஆற்றலை வைத்து பெரும் அழிவை தரும் அணுகுண்டை மனிதன் கண்டுபிடித்தான்.இன்று அணுவால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உலக பெரும் வல்லரசுகள் யாவும் பிற நாடுகளை மிரட்ட தன் அணுகுண்டு கை இருப்பையே கைகாட்டுகின்றனர்.அணு ஆற்றல் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் இதன் பயன் கொஞ்சம் என்றாலும் ஆபத்துகள் அதிகம்.மேலும் அணுகதிர் பாதிப்பு என்பது சில நாட்களில் மறைந்திடகூடியது அல்ல அதன் பாதிப்புகள் குறைய பல நூறு வருடங்கள் ஆகும்.

விஞ்ஞானம் மனிதனை நல்ல வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும் மேலும் அணைத்து தரப்பு மக்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.இந்த பெருவெடிப்பு சோதனை என்னைபொருத்தவரை தேவை இல்லாதது.அதில் கொட்டப்படும் கோடி கணக்கான பணத்தை அடிப்படை வசதி இல்லாத பலகோடி மக்கள் இந்த உலகத்தில் இருகிறார்கள் அவர்களுக்கு பயன்படுத்தாலாம்.மேலும் மனிதன் மனிதனோடு சண்டை இட்டால் அது மனிதர்க்கு மட்டுமே பாதிப்பு இயற்கையோடு சண்டை இட்டால் அது உலகத்திற்கே பாதிப்பு.

இயற்கை கொடுத்த அன்பு பரிசு இந்த பூமி இதை பத்திரமாக பயன் படுத்தினாலே போதும் அதைவிடுத்து இந்த பரிசு எங்கே வாங்கியது எப்படி செய்தது என்று சோதித்தால் இயற்கையும் நம்மை சோதிக்கும்.