இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Dec 30, 2008

வேண்டாம் இலவசம்

நம் மக்களை மேலும் மேலும் சோம்பேறிகளாக மாறி கொண்டுருக்கிறது நம்மை ஆளும் அரசு .இரண்டு ரூபாய்க்கு அரிசி ,இலவச வண்ண தொலைக்காட்சி என்று கொடுக்கிறது .மக்கள் பணத்தில் பொருட்களை தருவதற்கு நீங்கள் யார் ?

ஒரு உதாரணம் பார்ப்போம்:
இலவச தொலைக்காட்சி என்று ஒன்று கொடுத்தார்களே அது எதற்கு என்றால் நும் மக்கள் பொது அறிவை பெருக்குவதற்கு என்றார்கள் சிரிப்பு தான் வருகிறது .இப்பொழுது இருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பெரும்பாலும் மக்களின் அறிய நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கின்றன ( எனக்கு தெரிந்து மக்கள் தொலைக்காட்சி தவற ) .தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு நிகழ்ச்சி என்று பார்த்தல் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளே ஒளிபரப்புகின்றன .அதை விடுங்கள் சுதந்திர தினத்திற்கும் நமீதாவிற்கும் என்ன சம்மந்தம் என்றே என்னக்கு புரியவில்லை .

பொங்கலுக்கு பொங்கல் வைக்கும் பொருட்கள் இலவசமாக தருவதாக அறிவித்துள்ளீர்கள் அய்யா ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் விவசாயிகள் பொங்கலன்று பயன்படும் கரும்புக்கு விலை கேட்கிறார்கள் அதை தாருங்கள் . நிலவி வரும் கடும் மின்தடை இன்னும் பல இன்னல்களுக்கு ஆளாகி விளைய வைத்து இருகிறார்கள்.அவர்களை வாழவையுங்கள் அப்பொழுது கொஞ்ச நஞ்ச மிருக்கும் நம் விவசாயமும் வாழும் .

1 comment:

  1. தமிழகத்தில் அரசாங்கமே இந்த இலவசங்களை நம்பித்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதை நிறுத்த சொல்கின்றீர்களே...

    இப்போது கொடுத்து கொண்டு இருக்கும் இலவசம் அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும்.

    இலவசம்தான் ஆட்சியை காப்பாற்றும் என்ற நினைப்பு இருக்கும் வரை ஆண்டவனே ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் தொடரும்..

    ReplyDelete