இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 27, 2009

இப்ப நாளும் புத்தி வரட்டும் -பசங்க உணர்வுகள்


முதலில் இந்த பதிவை எழுத காரணமே இயக்குனர் எம்.சசிகுமாரும் ,இயக்குனர் பண்டிராஜ் ஆகியோர் தான் காரணம் .தரமான படைப்பை சினிமா உலகத்திற்கு வழங்கிய பசங்க திரை பட இயக்குனர் பண்டிராஜ் மற்றும் இந்த கதையை துணிந்து இயக்கிய இயக்குனர் எம்.சசிகுமார் ஆகியோருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் .

பசங்க படத்தை பார்க்கும் பொழுது நம்ம சின்ன வயசு சேட்டைகள் ,நினைவுகளை கண்முன்னே கொண்டு வருது, இப்ப இந்த மாதிரி வித்யாசமான படங்கள் ஏன் தமிழ் சினிமா காரங்க எடுப்பதில்லை . ஒரே குட்டைல ஊர்ன மட்டையை போல ஒரே விஷத்தை திரும்ப திரும்ப செஞ்சுட்டு இருகாங்க. .ஏன்பா இப்படி படம் எடுகறீங்கன்னு கெட்ட , இந்த சமூகத்துல நடகறததான் படமா எடுகுரோம்னு சொல்லறாங்க.காதல் இல்லேன்னா பழிக்கு பழி வாங்கற கதைகள் இத விட்ட இந்த உலகத்துல வேற ஒண்ணுமே கிடையாத. சினிமாங்கறது ஒரு களம் அதை இந்த காதல், கத்தி குத்துக்கு மட்டுமே பயனபடுத்துறது சரி அல்ல .வெறும் தொப்புளையும் தோலையும் காட்டி பணம் சம்பாரிகறதை விட வித்யாசமான முயற்சிகளில் ஈடுபடலாம் .ஒரு படம் என்றால் ஒரு ஒபணிங்கு சாங்கு மூணு சண்டை காட்சி நாலு செண்டிமண்டு வெளிநாட்ல ரெண்டு பாட்டு இது மட்டும் போதுமா .

தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் தமிழ் சினிமா உலகம் கதை களத்தில் பின்தங்கியே உள்ளது .கதைக்காக தான் நாயகன் ஆனால் இங்கே நாயகனுக்கு உகந்தமாதிரி தான் கதை எழுத படுகிறது .கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு தெருகோடிகளில் வாழும் ரசிகன் புது பட போஸ்டருக்கு பால் ஊத்தும் நிலைமை இங்கே நிலவுகிறது.முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் வீரமல்லாம் சினிமாவில் மட்டுமே நிஜத்தில் அவர்கள் அப்படி அல்ல .நம் உணர்ச்சியை தூண்டி காசு சம்பாதிபவர்கள் .

சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த களம் அதை நல்ல வழியில் உபயோகித்தால் மிக பெரிய மாற்றத்தை இந்த சாமூகத்தில் கொண்டு வரலாம். விதயாசமான அதே சமயம் எதார்த்தமான சினிமா எப்பவும் வெற்றி பெரும் அதற்க்கு பெரிய கதாநாயகர்கள் தேவை இல்லை நல்ல கதை மட்டுமே இருந்தால் போதும் .நல்ல படைப்பை மக்கள் புறகணிக்க மாட்டார்கள் என்பதை சமீபத்தில் வெளிவந்த படங்களான வெண்ணிலா கபடி குழு ,சுப்ரமணியபுரம் போன்ற படங்களே சிறந்த உதாரணம் .

பிரம்மாண்டம் என்ற பேர்ல எது எதுக்கோ செலவு செய்ற நம்ம ஆளுங்க படத்திற்கு தேவையான கதையை கவனிப்பது இல்லை.
காலிவுட் தரத்திற்கான படம் என்று சொல்வார்கள் பொய் பார்த்தல் நாம சாப்டற காளிபிளோவேர் தரத்திற்கு கூட இருக்காது .காலிவுட் என்பது வெளிநாடிற்கான சினிமா தளம் அவ்வளவு தான் ,அப்பாவும் அங்கே கதைதான் ஹீரோ ,அந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி யார்வேணாலும் சாகர மாதிரி கதை அமைத்து இருப்பார்கள் இல்லாமலும் போலாம் அங்கு பெரிய நடிக நட்சத்திரங்களே அதற்க்கு ஒப்புக்கொண்டு நடிப்பார்கள் .ஆனால் இங்கு நேத்து வந்த துண்டு துக்டா முரட்டு தளபதி ,தங்க தமிழன்னு பேர் போட்டுக்கிட்டு பண்ற அலம்பல் தாங்களை ,அதே நேரம் தயாரிப்பாளர்கள் ஒன்றை உணரனும் கடந்த வருடத்தில் ப்ரமாண்டம்னு சொல்லிடு வந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை .ஆனா கதையை மட்டுமே நம்பி வெளிவந்த குறைந்த செலவில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி கண்டது .

அதே மாதிரி நாமளும் இந்த நடிகர்களை தூக்கி தலைல வச்சுட்டு ஆடறதை நாம நிறுத்திக்கணும்.பாராட்டுகள் இருக்கலாம் ஆனால் அவர்களையே தூக்கி வைத்து கொண்டாடுவது தவறு.அவர்களுக்காக நாமதான் அடுச்சுக்கிட்டு பாகயாளிய திரியிறோம் ,ஆனா அவுங்க இன்னிக்கு அடுச்சுகுவாங்க அப்புறம் நாளைக்கு போட்டோவுக்கு ஒன்னு சேர்ந்து போஸ் கொடுப்பாங்க .
அதனால தரமான படைப்புக்களை அரவணைத்து வெட்டி முழக்கம் போடும் அரைவேக்காடு தமிழ் படங்களை புறகணிப்போம் அப்பொழுதாவது அவர்களுக்கு புத்தி வரட்டும் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்று!

4 comments:

  1. i agreed tamil cinema definitely wants to change

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,


    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  3. Feel Good Movie. Xlent post.

    நன்றி.

    ReplyDelete
  4. உலகத்திற்கு வழங்கிய பசங்க திரை பட இயக்குனர் பண்டிராஜ் மற்றும் இந்த கதையை துணிந்து இயக்கிய(???) இயக்குனர் எம்.சசிகுமார் ஆகியோருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் .

    ReplyDelete