இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 25, 2009

செயற்கையை நோக்கி ஒரு வாழ்க்கை
















மனித இனம் எதற்கு படைக்க பட்டது ,ஏன் படைக்க பட்டது என்று தெரியவில்லை .ஆனால் நாம் இயற்கையால் தான் படைக்க பட்டோம் இயற்கையால் தான் வளர்க்க பட்டோம் .அனால் இன்று இந்த உலகில் எதையோ ஒன்றை அடைய ஆசைப்பட்டு இருக்கிற சுகங்களையும் இழந்துவிட்டோம் .பிற உயிர்களை போல நாமும் இயற்கை யோடு ஒன்றி வாழ்திருந்தால் இந்த முன்னேற்றங்கள் இருந்திருக்காது என்பது உண்மை .ஆனால் இன்று நம் கண்முன்னே எவ்வளவு கொடூர நிகழ்வுகள் ,ஆனாலும் நம் அந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாகவே பார்க்கிறோம் ஏன் நமது மனம் மரத்து விட்டதா ?இல்லை மரத்துவைக்க பட்டதா? தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து அழும் நாம் ஏன் ஒருவன் வழித்தடத்தில் துடித்து கொண்டிருக்கும் பொழுது கண்டும் காணாமல் செல்கிறோம் .நாம் வாழவில்லை வாழ்வது போல நடித்து கொண்டு இருக்கிறோம் .செயற்கையான சிரிப்புகள் ,செயற்கையான நடை ,செயற்கையான பேச்சு என்று நாமும் இயற்கையை பிறந்து செயற்கையை மாறிவிட்டோம் .பசுமையாய் இருக்க வேண்டிய நம் உள்ளம் வறண்டு கிடக்கிறது,சுதந்திரம் பற்றி பேசும் நாம் ஒரு சிறு பறவையின் சுதந்திரம் நமிடையே இருக்கிறதா என்று யோசித்தால் இல்லை ,எல்லை கோட்டை கடக்க கூட நமக்கு கடவு சீட்டு தேவை படுகிறது ,இவ்வளவு பெரிய மனிதன் அந்த சிறிய அட்டைக்குள் அடக்க பட்டுவிட்டான் கடவு சீட்டாக.ஆகா மனிதன் மீது இருந்த நம்பிக்கை போய் ஒரு கடவு சீட்டை நம்பவேண்டயுள்ளது.

சுதந்திரம் என்று சொல்லி நம் மீது கட்டுப்பாடு விதித்து கொண்டோம் .நவீன கலாச்சாரம் என்று சொல்லி நம்மையே அளித்து கொண்டோம் .ஏன் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு எல்லைகோட்டை ஓடியே சிந்தித்து கொண்டு இருக்கிறோம் .அதை மீறினால் தவறு என்று .

குடும்பத்துக்காக உழைக்கிறோம் என்று சொல்லி அந்த குடும்பத்தையே பிரிந்து நிற்கிறோம் .செயற்கையான பொருட்களை சேர்க்க இயற்கையான நம் உறுவுகளை பிரிந்து நிற்கிறோம் .

இன்று தினமும் கொலை கொள்ளை ,தீவிரவாதம் ,இன அழிப்பு என்று செய்திகள் கேள்விபடுகிறோம். கொலை செய்பவன் வஞ்சத்தை மறந்து ஒரு நிமிடம் யோசித்தால் அந்த கொலை நிகழாது ஆனால் அந்த ஒரு நிமிடம் இந்த மனம் யோசிக்க விடுவது இல்லை.இன அழிப்பு என்று சொல்லி நம் மானிட இனத்தையே அளித்து கொண்டு இருக்கிறோம் .பாதுகாகத்தான் ஆயுதம் என்று போய் உயிர்களை வித விதமாக கொன்று அளிக்கும் ஆயுதங்களைதான் உற்பத்தி செய்கிறோம் .ஏன் என்ற காரணத்தை பார்த்தல் பணம் என்ற ஒன்று .
அது உணர்வுகளை பிரிகிறது உணர்ச்சிகளை உடைக்கிறது.

அறிவுக்காக படிப்பது என்று போய் மதிபென்னுகாக படித்துக்கொண்டு இருக்கிறோம் .விளைவு அந்த புத்தகங்களில் உள்ள எழுத்துகள் நமக்கு வெறும் எழுத்தாகவே தெரிகிறது ,அதிலுள்ள கருத்தை நமது மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது .எதனால் என்று பார்த்தல் கல்வி மாயம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று ஒரு நிலை இன்று

இன்று நம் கையில் செல்போன் என்ற சாதனம் இருக்கிறது தகவல் தொடர்புக்கே அந்த சாதனம் ஒழிய வேரஎதிர்க்கும் இல்லை .ஆனால் நம் அந்த சாதனத்தை பேசுவதற்காக வாங்கி பேசும் மனபூர்வமான நேரத்தை குறைத்து கொண்டோம் .எப்படி என்று பார்த்தல் பணம் வந்து நிற்கிறது முன்னால் .பேசுவதற்காக வாங்கி பயன்படுத்திய அந்த சாதனம் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பிற வசதிகளை புகுத்தி ,காசை பறித்து ,மனிதனிடமிருந்து பிரித்து விடுகிறது .

தொலைக்காட்சி என்ற கண்டுபிடிக்க பட்டு இன்று நம் இல்லத்தில் தவறாமல் குடிகொண்டு விட்டது .உலக நிகவுகளை அறிய பயன்படுத்திய இந்த சாதனம் இன்று கால மாற்றத்தால் மிக பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறது நம் கண்முன்னால் .நம் எதை எதை வேண்டாமென்று நினைகிறோமோ உதாரணமாக விரோதம்,ஆக்ரோஷம் ,பகை ,ஆபாசம் போன்றவற்றை இலவசமாக நம் வீட்டிலேயே பார்த்து கொல்ல்கிறோம் .மேலும் ஆபாசம்,பழிதீர்த்தல் போன்ற வற்றை காட்டி அவர்களும் பணம் சம்பாதித்து பின்பு நம் உள்ளங்களையும் சீரழிகின்றனர் .வீட்டிலிருந்து கொண்டே இன்று நாம் நம் உறுவுகளுடன் பேசி கொள்வதில்லை .தொலைக்காட்சியே கதி என்று கிடக்கிறோம். விளைவு இன்று உருகளுள் சரியான புரிந்து கொள்ளுதல் இல்லை ,அதனால் விவாகரத்து ,தற்கொலை போன்ற சோகங்களில் முடிந்து விடுகிறது .

இந்த மனித இனம் ஏன் இப்படி அகிவிட்டது என்று தெரியவில்லை? .பணம் ஒரு தேவைதான் ஆனால் பணமே லட்சியமாக இருந்தால் வாழ்ந்து என்ன பயன் இந்த உலகில்.எதையோ தேடி தொலைந்து கொண்டு இருக்கும் நம் மனதினை நமக்காக காத்து கொண்டு இருக்கும் நம் உயிர்களை தேடி ,அவர்களின் உணர்வுகளை தேடி புறப்படுவோம் .எல்லை கடந்த அன்பை பெறுவோம் .

1 comment:

  1. நல்ல கட்டுரை ஆனந்தன்
    தொடருங்கள் சந்திப்போம்!
    நம்ம பக்கங்களுக்கும் வாங்க...

    ReplyDelete