இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 30, 2009

ஆற்காட்டாரிடம் வெத்து வேட்டு வெள்ளச்சாமியின் நகைச்சுவை பேட்டி

(இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே)
நமது தமிழ் ஊடக சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளச்சாமி -ஒளிவிளக்கு துறை (மின்வெட்டு ) வீராசாமியுடன் நகைச்சுவை நேர்காணல்.

(நமது நிருபர் அவரின் நேர்காணலுக்கு காத்து கொண்டு இருக்கிறார் அப்பா பார்த்து மின்சாரம் கட் ஆகிடுச்சு ,என்னடா இப்படி ஆகிபோச்சே அப்பிடீனு நமது நிருபர் நொந்து கொண்டு இருக்கும் வேலையில் திடீர் என்று ஒரு வெளிச்சம் தென்படுகிறது என்ன வென்று பார்த்தல் நமது வணகத்துகூரிய ஒளிவிளக்கு துறை அமைச்சர் வீராசாமி கையில் விளக்கு ஏந்திய படி நடந்து வருகிறார்.வந்ததும் மேசை மேல் வெளக்கை வைத்து விட்டு உங்கள் பேட்டியை ஆரம்பியுங்கள் என்றார் )

நிருபர்:வணக்கம் சார்.

(சீக்கிரம் பேட்டிய ஆரம்பி பாஸு பீசு கட்டய புடுங்கறதுக்கு நேரமாச்சு என்று நினைத்த படியே )
ஒளிவிளக்கு :வணக்கம் வணக்கம் பேட்டியை ஆரம்பிங்க?

நிருபர் :சார் நடந்து முடுஞ்ச பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி அதிக இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதை பற்றி என்ன நினைகிறீர்கள் ?

(எங்க ஆத்தா மேல சத்தியமா நா இத எதிர்பாக்கவே இல்ல என்று நினைத்து கொண்டு )
ஒளிவிளக்கு:இந்த வெற்றி நாங்க ஏற்கனவே எதிர் பார்த்துதான் ஆனா ?

நிருபர்:என்ன ஆனா சார் ?

(சுதாரித்து கொண்டு )
ஒளிவிளக்கு :ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல அடுத்த கேள்விய கேளுங்க

நிருபர்:நீங்க ஒரு பொது கூட்டத்தில தேர்தலில் எனது கட்சி தோல்வியை தழுவினால் அதற்க்கு நாந்தான் காரணம் என்று கூறினீர்களே அதை பத்தி இப்பொழுது உங்கள் கருத்து என்ன ?

(எதுக்கு இதய எல்லாத்தையும் கொடஞ்சு கொடஞ்சு கேக்குறான்)
ஒளிவிளக்கு: அது ஊடங்களில் திரித்து வெளியிடப்பட்ட செய்தி

நிருபர்:சார் உங்களால சிறு தொழில் செய்யறவுங்க எல்லாம் கடுமைய பாதிப்பு அடங்சுருக்காங்க


(ஏன்டா கரண்டு இருந்த குடுக்க மாட்டமா என்று நினைத்த படி )
ஒளிவிளக்கு: இது எதிர் கட்சிகள் திட்டமிட்டே பரப்புற பொய் ஏன் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மெழுகுவத்தி தொழில்,ராந்தல் விளக்கு உற்பத்தி ,ஜெனரேட்டர் உற்பத்தி பன் மடங்கு வழங்துள்ளதே இதில் இருந்தே நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஆட்சியில் சிறுதொழில்கள் பாதிக்க படவில்லை என்று

நிருபர்:சார் தேர்தலுக்கு முன்ன கொஞ்ச நாள் கரண்டே கட்டு ஆகறதில்ல தேர்தல் முடுஞ்சப்பரம் மறுபடியும் மின்வெட்டு இருக்கிறதா பொதுமக்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களே

ஒளிவிளக்கு:அதுக்கு காரணம் டேம்ம்ள(அனை) தண்ணி வத்தி போச்சு அப்புறம் பொள்ளாச்சி பக்கத்துல்ல கற்றாளை உற்பத்தி செய்ற பேன் விசிறி நாள் ஒடஞ்சு போச்சு அத கூடிய சீக்கிரம் ரெடி பண்நீருவோம்.

நிருபர்:உங்கள பதிவர்கள் நிறைய பேர் ஒட்டி ஒட்டி எழுதி கிண்டல் பண்றாங்களாம் உங்களுக்கு அதபத்தி எதாவது (சொல்லி முடிகரதுக்குலேயே முந்திக்கொண்டு)

ஒளிவிளக்கு ;ம்ம் அத பத்தி நா கேள்வி பட்டேன் யார் யார் ஒட்டி எழுதுறாங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கிறோம் கூடிய சீக்கிரம் -

நிருபர்:கூடிய சீக்கிரம் ?

ஒளிவிளக்கு :கூடிய விரைவில் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அவங்கள ஒட்டி ஒட்டி எழுதலாம்டு இருக்கேன் .

நிருபர் :(கொஞ்சம் மெதுவாக) சார் எதிரொலி அப்படீன்னு ஒரு நாளிதழ் வருது அதனுடைய சர்குலேசன் எப்படி போகுது ?

(அத நானே படிக்கறதில்ல)
ஒளிவிளக்கு :டீ கடக்காரன் போண்டா மடிக்கரதுக்கு சும்மா குடுத்தாலும் கூட வாங்க மாட்டீங்கறான்

நிருபர்:(தலைவரு தினம் அதுல்ல கவிதை எழுதுவாரோ என்னவோ என்று நினைத்த படி)இந்த மின்வெட்டு எப்ப குறையும்

(அது நா இருக்கிற வரைக்கும் நடக்காது)
ஒளிவிளக்கு:வருகிற சட்டமன்ற இடை தேர்தலை ஒட்டி கம்பம்,தொண்டாமுத்தூர் உட்பட நான்கு தொகுதிகளிலும் விரைவில்(தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்)மின்வெட்டு அங்கு ரத்து செய்ய படும் அதை விடுத்து மற்ற பகுதிகள் தொடர்ந்து என் கண்காணிப்பிலேயே இருக்கும் .

நிருபர்:சார் மக்கள் உங்க மேல வெறுப்ப இருக்காங்க ஒரு அமைச்சர அத பத்தி உங்கள் கருத்து

ஒளிவிளக்கு:அந்த கோபத்தை இந்தியா ஜனநாயகத்தின்(பணநாயகத்தின்) அடிப்படையில் தேர்தலின் பொது மரகடிக்கப்படும்

நிருபர் :கடைசி கேள்வி சார் நீங்க (2011) தேர்தல்ல உங்க வெற்றி வைப்பு எப்படி இருக்கும்னு நினைகிறீங்க

(அதே ஏன்டா நியாபகபடுதுறீங்க)
ஒளிவிளக்கு :தமிழின தலைவர் தற்பொழுது மக்களை (தன்)குடும்பம் போல் கருதி சேவை செய்து வருகிறார் அதன் மூலம் அடுத்த தேர்தலிலும் நான் வெற்றி பெறுவது உரிதி.

முற்றும் .
(நல்ல இருந்த நல்ல இருக்குன்னு கமெண்ட் போடுங்க நல்ல இல்லேன்னா மொக்கைனு சொல்லுங்க அடுத்த முறை இன்னும் சிறப்ப பன்றதக்கு)




2 comments:

  1. good..but not much interesting

    ReplyDelete
  2. எல்லாம் சரிதான் நண்பரே. எழுத்துப் பிழை நிறைய இருக்கிறது. ஒருதடவை சரி பார்த்தும் upload பண்ணவும். வாழ்த்துக்கள்

    ReplyDelete