இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jun 23, 2009

நகைச்சுவை -சட்டசபைக்கு போகாமல் சத்தம் போட புதிய வழி

(யாரையும் புண்படுத்த நோக்கில் எழுதப்பட்டது அல்ல )




சட்டசபை கூட்டமோ பாராளுமன்ற கூட்டமோ எப்ப நடந்தாலும் அமளி துமளி ஆகறது சகஜமா போச்சு.வெளிநடப்பு செய்யறதும்,கைநீட்டி பேசறதும் இப்படி ஒரே பொழப்ப போச்சு.அப்புறம் என்ன சபை ஒத்தி வைக்கபடுகிறது என்று சபாநாயகர் தொண்டைவரள கத்துவார்.

மக்கள் வரிப்பணத்துல தேர்தல் நடத்தி ஒட்டு போட்டு பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போங்க ராசா அப்படீனு அனுப்பி வச்சறோம்.அதுல பெரும்பாலானோர் சட்ட சபைக்கு போய் மக்கள் பிரச்சனையை பேசறாங்களோ இல்லையோ சத்தம்போட்டு வெளினடப்பவது செய்து டிவி சானலுக்கு பேட்டி கொடுக்குறாங்க.அதுல இன்னும் சில சட்டசபை உறுப்பினர்கள் அதுக்கும் வரமாட்டாங்க கேட்ட நேத்து வாசப்படில வழுக்கி உளுந்துடேன் போன்ற உன்னதமான காரணங்கள் சொல்வார்கள்.அதிலும் பாரளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு விமானத்துல(வரி பணத்துல)டாட்டா காடீட்டு போவாங்க ஆனா அங்க போய் பாராளுமன்றத்துக்கு போகமாட்டாங்க குளிர்கால கூட்ட தொடர் குளிர் அடிக்குது அதான் போகமுடியல அப்படீனு சொல்வாங்க.

என்னடா எப்ப சட்ட சபை கூடுனாலும் அஞ்சாவது படிக்கிற பள்ளிகொட பசங்க மாதிரி ஒரே சத்தம் போட்டு அடுச்சு புடுச்சு ஓடி திரியரார்களே நாம கட்டற வரி பணம் எல்லாம் இப்படி இவுங்க கூச்சல் போடறதுக்கே போயிடுதே இதுக்கு எதாவது வேற வழியும் இருக்க பணம் மிச்சம் ஆகணும் அதே சமயம் சட்டசபையும் நடக்கணும் என்ன பன்னால்னு குப்புற படுத்து யோசிசப்ப குபிர்னு ஒரு ஐடியா வந்துச்சு அது என்ன அப்பிடீனா ?

இந்த ஐடியா -யாவை முதல்ல நம்ம சட்ட சபை உறுப்பினர்களுக்கு பரிசோதித்து பார்க்கலாம் அப்புறமா டெல்லிக்கு போகலாம.

முதல்ல நம்ம தமிழ்நாட்ல இருக்கிற (234)சட்டசபை தொகுதி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் ,வெப்காம் ,ஹெட் போன் அப்புறம் ஒரு பி.எஸ்.என். எல் இன்டர்நெட் இணைப்பு (லிமிடெட் download) ஒன்று அவர்கள் வசிக்கும் வீட்டிற்க்கே கொடுத்துவிட வேண்டியது .அப்புறம் ஆளுக்கு ஒரு ஜிமெயில் அல்லது யாஹூ இலவச (இலவசம்தான் ரொம்ப புடிக்குமே )அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுதர்றது .அப்புறமென்ன கூட்டம் கூடி சத்தம் போடணுமோ அப்பெல்லாம் (234)உறுபினர்களுக்கும் ஒரு மெயில் அனுபிடனும் .எல்லோரையும் ஒரே நேரத்தில் ஆன்லைன் -நில் வரச்சொல்லி என்ன பேசனும்னு தோணுதோ அத பேசிட்டு இல்ல அவங்க திருவுருவத்தை பார்கனும்ன வெப்காம்-ல பார்த்துட்டு சத்தம் போடலாம்.முக்கியமான கோப்புகள் அனுப்ப வேணும்னா ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சர் மூலமா அனுப்பிவிடலாம.

உறுப்பினர்கள் யாராவது ரொம்ப சத்தமா பேசினாங்கன்னா நம்ம மின்துறை அமைச்சர் கிட்ட சொல்லி அந்த தொகுதி முழுக்க கரண்ட் கட்டு பண்ணீடலாம் .அப்புறம் அடுத்தநாள் வரைக்கும் அவற்றை சாட்டிங் குழுமத்தில் சேர்த்துக்க கூடாது போன்ற அவசர சட்டம் கொண்டு வரலாம் .ஆளுங்கட்சிக்கு ஒரு குழுமமும் எதிர்கட்சிக்கு ஒரு குழுமமும் அதை கட்டு படுத்தறது சபாநாயகர் தான் (admin)அல்லது (moderator).இதன் மூலம் நம்ம வரிப்பணம் ரொம்ப மிச்ச படுத்தலாம்.

எப்படி எல்லாம் மிச்சம் ஆகுதுன்னு கேகுறீங்களா

1)நம்ம உறுப்பினர்கள் யாரும் சென்னைல இருக்கிற சட்டசபைக்கு வர வேண்டியதில்லை .இதன் மூலம் நம்ம உறுப்பினர்களுக்கு தருகிற பயணப்படி மிச்சம்.(உறுபினர்களுக்கும் அவர்கள் பள்ளி ,கல்லூரி போன்ற தொழில் பாதிப்பு அடையாது )
2)உறுப்பினர்கள் யாரும் வராததுனால சென்னைல இருக்கிற சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வாடகைக்கு விடலாம் .இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் .
3)அதே போல சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கான்டீனை நேராக அண்ணா நினைவிடம் அல்லது எம்.ஜி.ஆர் நினைவிடம் பக்கத்தில் இடமாற்றலாம் எதிர்காலத்தில் உன்னா விரதம் இருக்கும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
4)அதே போல உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு காரில பவனி வருவதால் சென்னையில் கடும் போக்குவரத்து ஏற்படும் ஆனால் இந்த ஆன்லைன் முறையால் உறுப்பினர்கள் யாரும் வரவேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் பெரிதும் பயன் அடைவர்.

உறுப்பினர் நிபந்தனை .
.கண்டிப்பாக யாரும் மற்ற சாட்டிங் குழுமத்துக்குள் செல்ல கூடாது
.பாதியில் யாரும் சயின் அவுட் செய்ய கூடாது அப்படி செய்தால் ஒரு வாரத்திற்கு அவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்க படும்
.மின்சாரம் தரவும் தராமல் போவதும் அந்த அந்த சமயம் பொருத்தது அதை பற்றி யாரும் புகார் மனு வாசிக்க கூடாது .


என்ன எப்படி இருக்குங்க நல்லா இருந்த நல்லா இருக்குனு சொல்லுங்க இல்லேன்னா நல்லா இல்லைன்னு சொல்லுங்க

1 comment:

  1. தமாஸ் இல்ல!
    எதிர்காலத்தில் நடக்கலாம்!

    ReplyDelete