இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 2, 2009

அட படிச்ச முட்டாள்களே


நம்ம மத்திய அரசாங்கம் கொஞ்சா நாளைக்கு முன்னாடி ஒரு சட்டம் கொண்டு வந்தங்கல்ல அது உங்களுக்கு நியாபகம் இருக்க இல்லையா .அதாவது பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது,மீறினால் அபராதம் என்று முன்னாள் மத்திய சுகதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஒரு சட்டம் கொண்டு வந்தாருங்க நிறைய பேருக்கு அந்த சட்டம் மறந்து போயிருக்கும்.அந்த சட்டத்தை பத்தி வாய்கிழிய ஊரெல்லாம் ரெண்டு நாள் பேசுனாங்க மூணாவது நாள் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாய் அவ அவன் பொது எடத்துல நின்னு புகை பிடிச்சுட்டு இருக்கான்.

இப்ப எதுக்குடா நீ படிச்சவங்களை வம்புக்கு இழுக்குறே அப்படீனு கேக்குறீங்களா? படிச்சவங்க எப்ப பார்த்தாலும் படிக்காதவனை கண்டால் ஒரு இளக்காரமா ஒரு பார்வை பார்பான் என்ன அவன் அறிவு கம்மி எத சொன்னாலும் புரிசுக்க மாடீங்கறான் .சரி நாம படிச்சவுங்க தானே நம்மக்கு எது சொன்னாலும் புரியும் தானே.அப்புறம் ஏன் இன்னும் பொது இடத்துல புகை பிடிக்கறீங்க.

நாலு எழுது படிச்ச நாம அரங்சாங்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்போ தப்பு செஞ்சுட்ட வாய்கிழிய அவுங்கள பத்தி குறை சொல்ல்றோம் அல்லது திட்டுகிறோம்.ஆனா அரசாங்கம் இந்த பொது இடத்தில் புகை பிடிக்க தடை என்ற சட்டம் எதுக்கு போட்டாங்க.

1)பொது இடத்துல புகை பிடித்தால் உன்னை மட்டும் பாதிக்காது உன்ன சுத்தி இருகரவங்களையும் பாதிக்கும் அதனால் அந்த சட்டம் போட்டாங்க.
2)இதனால் என்ன நன்மை சுற்றுசூழல் மாசு அடைவது சிறிதளவேனும் குறிக்கிறது.
3)இந்த சட்டதினால பொது இடத்தில் முக்கியமா ,கடைகள் ,பேருந்து நிறுத்தங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில் குழந்தைகள், பெரியவர்கள்,மற்றும் நோயுற்றவர்கள் போன்றவர்களும் இருப்பார்கள் அந்த கெட்ட நாற்றத்தில் இருந்து அவர்கள் இதனால் பெரிதும் பயன் அடைவார்கள்.

மொத்தத்தில் புகை பிடிகிறதை சுத்தமா நிறுத்தி விட்டால் உடலுக்கு இன்னும் நன்மை
இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் சொல்லிடே போகலாம் .

இப்ப சென்னை பெரு நகரத்தில நெறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் முக்கியமா மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் இன்னும் பிற அலுவகங்களில் வேலை பார்பவர்கள் அலுவலங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் போய் சிகரெட் போன்றவற்றை வாங்கி சாலை ஓரங்களில் நின்று புகைத்து கொண்டு இருகிறார்கள் .என் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட பொது இடத்தில் தான் இன்னும் புகைத்து கொண்டு இருகிறார்கள் .இன்னும் சொல்ல போன சட்டத்தை காவல் காக்க வேண்டிய காவலர்களே அந்த தப்ப பண்ணிட்டு இருக்காங்க .

இவங்க எல்லாம் மெத்த படிச்சவங்க தானே அரசாங்கம் புதுசா வரி போட சட்டம் கொண்டு வந்த ஆய் ஊய் கூச்சல் போடறவுங்க தானே.இந்த பொது இடத்தில புகைக்க தடை என்ற சட்டத்தை ஏன் பின்பற்ற தெரியல .அப்படி செஞ்சா அவுங்க உடம்புக்கும் நல்லதுதானே.அதுமட்டுமா புகையால் ஏற்படும் தீமைகளையும் நீங்க மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.

கிராமத்துல சொல்லுவாங்க படிக்காதவனை விட படிச்சவங்க தான் இப்ப அதிகமா தப்பு பண்றாங்கன்னு.

தெரிந்ததே தப்பு செய்கிறவர்கள் படித்த முட்டாள்கள் தானே ?

Jun 29, 2009

தமிழ் சினிமாவும் -சசிகுமார் என்ற கலைஞனும்



தமிழ் சினிமாவின் முகம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு இருக்கிறது ,அந்த முகத்தை மாற்றுவது யார் பல புதுமுக இயக்குனர்களும் ,சினிமா ரசிகர்களும் தான் .முன்னெல்லாம் சினிமா என்றால் கதாநாயகனை மட்டும் முன்னிறுத்தி படத்தை எடுத்து கொண்டு இருந்தார்கள் (இன்றும் சில திருந்தாத ஜென்மங்கள் அப்படிதான் எடுத்து கொண்டு இருகிறார்கள் ).நடிகர்களுக்கு ஏற்ற கதைகள் போய் கதைக்கு ஏற்ற நடிகர்கள் தான் தேவை என்ற நிலைக்கு தமிழ் சினிமாவுலகம் வந்துள்ளது என்று சொல்லலாம்.பிரம்மாண்டம் என்பது கதயே தவிர அதில் நடிக்கும் நடிக,நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தற்பொழுது வந்த சில வெற்றி படங்களே உதாரணம் .

தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்ட தமிழ் திரை உலகம் அதை வைத்து கொண்டு படத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து கதையே இல்லாமல் காலை தேய்த்து நடுக்கும் பொழுது தீபொறி வருமாறு செய்வதும் ,மூச்சுக்கு முன்னூறு தடவை பொறி பறக்கும் வசனங்கள் பேசுவதும் இப்பொழுது எடுபடுவதில்லை.எதார்த்தமான கதை,ஒரு பகுதியின் கலாச்சாரம்,மொழி ,ஆகியவற்றை பிரதிபலிக்கும் படங்களே வெற்றிநடை போடுகின்றன.ஓவரான பில்ல்டப்புகளை ஓட ஓட விரட்டு கின்றனர்.இந்த மற்றம் தான் தமிழ் சினிமா விற்கு நல்லது.

இப்ப சசிகுமாரை பற்றி பாப்போம் கடந்த ஆண்டு எவரும் எதிர்பார்கவன்னம் சுப்ரமணியபுரம் என்ற படம் தமிழ் திரை உலகத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. புதுமுக நடிகர்கள்,புதுமுக இசை அமைப்பாளர் என்று பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது .அதை தயாரித்து இயக்கி,ஒரு நடிகராகவும் அந்த படத்தில் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.யாரும் இந்த படத்தின் கதையை தயாரிக்க முன்வராத காரணத்தினால் தானே தயாரித்தார்.இந்த படம் சினிமாவில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்த வருடம் வெளியான பசங்க படத்தை எடுத்து மறுபடியும் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று நிருபித்து விட்டார்.இவர் தயாரித்த பசங்க படம் வேறு சில தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் இவரிடம் வந்து சேர்ந்தது.அதை அப்படியே தயாரித்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் தயரிப்பாளர் என்ற நற் பெயரையும் வாங்கியுள்ளார் .அதோடு நின்றார நாடோடிகள் படத்தில் மறுபடியும் நடித்து அந்த படமும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .ஒரு தயாரிப்பாளராகவும் ,ஒரு இயக்குனராகவும் ,ஒரு நடிகர்ரகவும் வெற்றி பெற்றுள்ள சசிகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .சசிகுமாரின் இந்த வெற்றி தொடர என் வாழ்த்துக்கள் .

Jun 26, 2009

கூகிள் தளத்தை முடக்கிய மைக்கேல் ஜாக்சன்














அமெரிக்கா
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை பற்றி செய்தி அறிய இணயத்தில் அதிக அளவு கூகிள் தளத்தை பயன்படுத்தியதால் கூகிள் செய்தி தளத்திற்கான சர்வர்கள் அறை மணி நேரம் ஸ்தம்பித்து விட்டது .இதனால் கூகிள் சர்வர் சிறிது நேரம் செய்திகளை அளிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.

இதே போல் தற்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் (twitter) இணையதளமும் ஸ்தம்பித்து விட்டது . இங்கிலாந்து நாட்டை சேர்ந்த (B.B.C) இணையத்தளம் இன்று நாற்பத்தி ஆறு சதவிகிதம் வரை டிராபிக் உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது . செய்திக்காக உலக அளவில் பிரபலாமான இணையதளங்களிலும் இதே நிலைமை தான்.

அந்த நபரின் இறந்த செய்தியை முதலில் அறிவித்தது (www.tmz.com)என்ற இணையத்தளம் .இந்த செய்தி படி படியாக சோசியல் நெட்வொர்க் தளங்களில் பரவி பின்பு வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுதும் அதிக அளவில் சென்றடைந்தது .

இன்று கூகிள் (Trends) அதிக் அளவு தேடப்பட்ட தகவலும் மறைந்த பாப் பாடகரை பற்றியதே.இன்று முழுவதும் இணையம் மூலம் விவாதிக்கப்படும் பத்து முக்கியமான தலைப்புகளும் மைக்கேல் ஜாக்சன் பற்றியதே.

Jun 25, 2009

ஐ .நா சபையும்- நம்ம ஊரு போலீசும்

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை)










ஐ.நா சபை -நம்ம ஊரு போலீஸ் ஓர் ஒப்பீடு

  • .நா. சபை உலக பிரச்னைக்கு பஞ்சாயத் பண்றதுக்கு ஆரம்பிச்ச ஒரு அமைப்பு.
நம்ம போலீஸ் உள்ளூரு பஞ்சாயத்து பண்றதுக்கு ஆரம்பிச்ச அமைப்பு.

  • .நா. சபைய பார்க்க போகனும்னா பிளைட் புடுச்சு அமெரிக்காவுக்கு போகணும்
நம்ம போலீச பார்க்க போகனும்னா அஞ்சு குயர் பேப்பர் வாங்கிட்டு போகணும் பார்த்த பிறகு குளிர் காலமா இருந்த டி காபி வாங்கி கொடுக்கணும் ,வெயில் காலமா இருந்த ஆப்பிள் ஜூஸ் ,ஆரஞ்சு ஜூஸ் வாங்கிகொடுக்கணும் (அவ்வளவுதான்)

  • .நா. சபை ஆரம்பிக்க பட்டது உலக நாடுகள் பிரச்சனை முக்கியமா போர் பிரச்சனை தீர்பதற்கு ஆனா இப்பவும் போர் நடந்து தான் இருக்கு.
நம்ம போலீஸ் வேலைக்கு போட்டது கொலை கொள்ளை போன்றவற்றை தடுக்க ஆனா இப்பவும் நடந்துட்டு தான் இருக்கு.

  • .நா. சபை போர் நடந்து முடுஞ்ச பிறகு பிளைட்ல உணவு பாக்கெட் போடுவாங்க. (இருக்கிறவன் எல்லாம் செத்த பொறவு யாருக்கு போடரான்குனு தெரியல)
நம்ம போலீஸ் கொலை ,கொள்ளை நடந்த பிறகு தான் அந்த இடத்துக்கே வருவாங்க .

  • .நா. சபைல போர் நடக்கற பொழுது போர்டுக்கும் நாட்டின் மீது கண்டனம் தெரிவிச்சு தீர்மானம் மட்டும் நிறைவேதுவாங்க(அவ்வளவுதான் ).
நம்ம போலீஸ் கேஸ் கொடுக்க போனம்னா புகாரை மட்டும் வாங்கிக்குவாங்க விசாரணை எல்லாம் பண்ண மாட்டாங்க. (சில சமையம் புகாரை எழுதி ஏன் பேப்பர் ர வெட்டியா தீகனும்னு விட்ருவாங்க)

  • .நா. சபை எப்பவும் கென்யா ,காங்கோ போன்ற குட்டி குட்டி நாட்ல தப்பு நடந்த உடனே பொய் பேசி தீர்த்துட்டு உலக அமைதிக்கு நாங்க என்றும் பாடுபடுவோம் அப்படீனு சொல்லிடு திரிவாங்க .(குட்டி நாடுகளின் பட்டியலில் இலங்கை வராது)*
நம்ம போலீஸ் எப்பவும் கொலை செய்றவனை ஜீப்ல ஏத்தி உட்டுட்டு பிக் பாக்கெட் அடிக்கறவன்,குழந்தை களிடம் முட்டைய புடுங்கி திங்கறவன் போன்றவர்களை புடுச்சு உள்ள போட்டுட்டு சட்டம் தன் கடமையை சரியா செய்யும் என்று நியூஸ் பேப்பர் காரங்களுக்கு பேட்டி கொடுக்கறது.
  • .நா. சபைல அவுங்க ஆதரவு வேணும்னா ஒட்டு வேணும்.
நம்ம ஊரு போலீஸ் ஆதரவு வேணும்னா நோட்டு வேணும் .(அதாங்க பணம் வேணும் )

  • .நா. சபைகிட்டேயும் படை இருக்கு அமைதி படைன்னு இருக்குனுதான் பேரு அதனால எப்பவும் அமைதியாத்தான் இருக்கும்.
நம்ம போலீஸ் கிட்டயும் படை இருக்கு நீங்க தமிழ் வரமாதிரி எப்பவும் சம்பவம் முடுஞ்ச பிறகுதான் வரும் வந்து ஒரு வாரத்துக்கு அங்கேயே இருக்கும்.

  • .நா. உரிமையாளர்கள் ,அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,ரஷ்ய ,பிரான்ஸ் போன்ற நாடுகள். (அப்பப்ப நீயா நான்னு பிரச்சனை வரும் )
நம்ம ஊரு போலீஸ் உரிமையாளர்கள் ஆளும் கட்சிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் .

  • .நா.சபை செயல்பாடுகளின் சாமீபத்திய உதாரணம் இலங்கையில் நடந்த இன அழிப்பு போர்.
நம்ம போலீஸ் செயல்பாடுகளின் சமீபத்திய உதாரணம் சட்ட கல்லூரி வாசலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.

இன்னும் சொல்லிடே போகலாம் எழுதுறதுக்கு தான் பிளாக்கர் அக்கௌன்ட் பத்தாது.


75ecx2ky8v

Jun 24, 2009

பன் டிவியும் -குப்பை லாரியும்

யாரையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல(ஏற்கனவே அவர்கள் புண்படுத்தியதால் )


பன் டிவி -குப்பை லாரி என்ன ஒற்றுமை சிறு விளக்கம் .

குப்பை லாரி பற்றி முதலில் பார்போம்.
தெருவுல கிடக்கிற குப்பய கூட்டி கூடைல போட்டு அந்த கூடைல இருக்கிற குப்பைய கொண்டுபோய் குப்பை அல்ல வர்ற லாரில போட்ட அந்த குப்பை லாரி போகிற பக்கமெல்லாம் ரோட்ல ரெண்டுபக்கமும் கொட்டிட்டே போயிடும் .குத்துமதிப்பா பார்தமன்னா நூறுகிலோ குப்பை லாரில இருந்துதுனா அது கடைசியா பொய் சேர்றப்ப அம்பது கிலோ குப்பை தான் இருக்கும் .குப்பை லாரி குப்பய அல்லுதோ இல்லையோ அது தன்னையும் நாரடுச்சு ஊரையும் நாரடுச்சுடும்.

பன் டிவி
அதே மாதிரி யாரும் வாங்கதா குப்பை படங்களை குத்தகை கணக்கா பேசி வாங்கிட்டு வந்தறாங்க.சரி குப்பை படங்களை வெச்சு அவுங்க என்ன பொங்கலுக்கும் தீபவளிக்குமா போடமுடியும் லாபம் பார்கனும்ள அதனால் ஒவ்வொரு ஊர்ல இருக்கிற திரை அரங்குகளை புடுச்சு அந்த குப்பை படங்களை வெளியிடறாங்க.குப்பய யாராச்சும் போய் பார்பாங்களா இல்லைல அதனால தன் கிட்ட இருக்கிற டிவி பலத்தால அந்த குப்பய கலர் ஜிகினாவ காட்டி வீட்ல இருக்கிற எல்லாத்தையும் தியேட்டருக்கு ஒடவைக்குறாங்க .அங்கே போன பிறகு தான் தெரியும் அது ஜிகினா இல்லை குப்பை கிடங்கு என்று . என்ன ஆச்சு -குப்பை படம் வீட்டையும் குப்பை ஆக்கிடுச்சு தியேட்டரையும் குப்பை ஆகிடுச்சு.

அதனால இப்ப பன் டிவி பார்கிறதுக்கே நிறைய பேருக்கு வெறுப்பாய் இருக்குது .எப்ப பாத்தாலும் ஒரே கூச்சல் கும்மாளம்னு .எப்படி பார்பாங்க அதன் தரம் தான் தாழ்ந்து விட்டதே .ஆத்துல விழுந்தேன் படத்தை வெளியிட்டது முதல் அதன் போக்கே மாறிவிட்டது .கதையே இல்லாத திரை காவியங்களுக்கு திரைவிமர்சனம் அரைமணி நேரம் வேறு. பட வரிசையில் பத்து வாரத்திற்கு முதலிடம் என்னத்த சொல்லறது .அவர்கள் வெளியிடும் அண்ட புளுகை மக்கள் இப்பொழுது வெகுவாக புரிந்து கொண்டு இருகிறார்கள் என்பது நிஜம் .

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை நல்ல தரமான படங்களை வெளியிட்டால் மக்களுக்கு ஜிகினா கூட காட்ட தேவை இல்லை அவர்களே எடுத்து பூசிகொல்ல்வார்கள் உங்கள் ஜிகினவை பிறரிடம் காட்ட.

Jun 23, 2009

நகைச்சுவை -சட்டசபைக்கு போகாமல் சத்தம் போட புதிய வழி

(யாரையும் புண்படுத்த நோக்கில் எழுதப்பட்டது அல்ல )




சட்டசபை கூட்டமோ பாராளுமன்ற கூட்டமோ எப்ப நடந்தாலும் அமளி துமளி ஆகறது சகஜமா போச்சு.வெளிநடப்பு செய்யறதும்,கைநீட்டி பேசறதும் இப்படி ஒரே பொழப்ப போச்சு.அப்புறம் என்ன சபை ஒத்தி வைக்கபடுகிறது என்று சபாநாயகர் தொண்டைவரள கத்துவார்.

மக்கள் வரிப்பணத்துல தேர்தல் நடத்தி ஒட்டு போட்டு பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போங்க ராசா அப்படீனு அனுப்பி வச்சறோம்.அதுல பெரும்பாலானோர் சட்ட சபைக்கு போய் மக்கள் பிரச்சனையை பேசறாங்களோ இல்லையோ சத்தம்போட்டு வெளினடப்பவது செய்து டிவி சானலுக்கு பேட்டி கொடுக்குறாங்க.அதுல இன்னும் சில சட்டசபை உறுப்பினர்கள் அதுக்கும் வரமாட்டாங்க கேட்ட நேத்து வாசப்படில வழுக்கி உளுந்துடேன் போன்ற உன்னதமான காரணங்கள் சொல்வார்கள்.அதிலும் பாரளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு விமானத்துல(வரி பணத்துல)டாட்டா காடீட்டு போவாங்க ஆனா அங்க போய் பாராளுமன்றத்துக்கு போகமாட்டாங்க குளிர்கால கூட்ட தொடர் குளிர் அடிக்குது அதான் போகமுடியல அப்படீனு சொல்வாங்க.

என்னடா எப்ப சட்ட சபை கூடுனாலும் அஞ்சாவது படிக்கிற பள்ளிகொட பசங்க மாதிரி ஒரே சத்தம் போட்டு அடுச்சு புடுச்சு ஓடி திரியரார்களே நாம கட்டற வரி பணம் எல்லாம் இப்படி இவுங்க கூச்சல் போடறதுக்கே போயிடுதே இதுக்கு எதாவது வேற வழியும் இருக்க பணம் மிச்சம் ஆகணும் அதே சமயம் சட்டசபையும் நடக்கணும் என்ன பன்னால்னு குப்புற படுத்து யோசிசப்ப குபிர்னு ஒரு ஐடியா வந்துச்சு அது என்ன அப்பிடீனா ?

இந்த ஐடியா -யாவை முதல்ல நம்ம சட்ட சபை உறுப்பினர்களுக்கு பரிசோதித்து பார்க்கலாம் அப்புறமா டெல்லிக்கு போகலாம.

முதல்ல நம்ம தமிழ்நாட்ல இருக்கிற (234)சட்டசபை தொகுதி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் ,வெப்காம் ,ஹெட் போன் அப்புறம் ஒரு பி.எஸ்.என். எல் இன்டர்நெட் இணைப்பு (லிமிடெட் download) ஒன்று அவர்கள் வசிக்கும் வீட்டிற்க்கே கொடுத்துவிட வேண்டியது .அப்புறம் ஆளுக்கு ஒரு ஜிமெயில் அல்லது யாஹூ இலவச (இலவசம்தான் ரொம்ப புடிக்குமே )அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுதர்றது .அப்புறமென்ன கூட்டம் கூடி சத்தம் போடணுமோ அப்பெல்லாம் (234)உறுபினர்களுக்கும் ஒரு மெயில் அனுபிடனும் .எல்லோரையும் ஒரே நேரத்தில் ஆன்லைன் -நில் வரச்சொல்லி என்ன பேசனும்னு தோணுதோ அத பேசிட்டு இல்ல அவங்க திருவுருவத்தை பார்கனும்ன வெப்காம்-ல பார்த்துட்டு சத்தம் போடலாம்.முக்கியமான கோப்புகள் அனுப்ப வேணும்னா ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சர் மூலமா அனுப்பிவிடலாம.

உறுப்பினர்கள் யாராவது ரொம்ப சத்தமா பேசினாங்கன்னா நம்ம மின்துறை அமைச்சர் கிட்ட சொல்லி அந்த தொகுதி முழுக்க கரண்ட் கட்டு பண்ணீடலாம் .அப்புறம் அடுத்தநாள் வரைக்கும் அவற்றை சாட்டிங் குழுமத்தில் சேர்த்துக்க கூடாது போன்ற அவசர சட்டம் கொண்டு வரலாம் .ஆளுங்கட்சிக்கு ஒரு குழுமமும் எதிர்கட்சிக்கு ஒரு குழுமமும் அதை கட்டு படுத்தறது சபாநாயகர் தான் (admin)அல்லது (moderator).இதன் மூலம் நம்ம வரிப்பணம் ரொம்ப மிச்ச படுத்தலாம்.

எப்படி எல்லாம் மிச்சம் ஆகுதுன்னு கேகுறீங்களா

1)நம்ம உறுப்பினர்கள் யாரும் சென்னைல இருக்கிற சட்டசபைக்கு வர வேண்டியதில்லை .இதன் மூலம் நம்ம உறுப்பினர்களுக்கு தருகிற பயணப்படி மிச்சம்.(உறுபினர்களுக்கும் அவர்கள் பள்ளி ,கல்லூரி போன்ற தொழில் பாதிப்பு அடையாது )
2)உறுப்பினர்கள் யாரும் வராததுனால சென்னைல இருக்கிற சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வாடகைக்கு விடலாம் .இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் .
3)அதே போல சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கான்டீனை நேராக அண்ணா நினைவிடம் அல்லது எம்.ஜி.ஆர் நினைவிடம் பக்கத்தில் இடமாற்றலாம் எதிர்காலத்தில் உன்னா விரதம் இருக்கும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
4)அதே போல உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு காரில பவனி வருவதால் சென்னையில் கடும் போக்குவரத்து ஏற்படும் ஆனால் இந்த ஆன்லைன் முறையால் உறுப்பினர்கள் யாரும் வரவேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் பெரிதும் பயன் அடைவர்.

உறுப்பினர் நிபந்தனை .
.கண்டிப்பாக யாரும் மற்ற சாட்டிங் குழுமத்துக்குள் செல்ல கூடாது
.பாதியில் யாரும் சயின் அவுட் செய்ய கூடாது அப்படி செய்தால் ஒரு வாரத்திற்கு அவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்க படும்
.மின்சாரம் தரவும் தராமல் போவதும் அந்த அந்த சமயம் பொருத்தது அதை பற்றி யாரும் புகார் மனு வாசிக்க கூடாது .


என்ன எப்படி இருக்குங்க நல்லா இருந்த நல்லா இருக்குனு சொல்லுங்க இல்லேன்னா நல்லா இல்லைன்னு சொல்லுங்க